தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இப்போது எந்த சேனலை பார்த்தாலும் யாரோ ஒரு தொகுப்பாளரோ, தொகுப்பாளினியோ நேயர்களுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டே இருக்கிறார். இந்த டெலிபோன் கான்செப்டை உருவாக்கி அதன் மூலம் புகழ் பெற்றவர் உமா மகேஸ்வரி. பெப்ஸி நிறுவனம் ஸ்பான்சர் செய்த உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை 15 ஆண்டுகள் நடத்தி சாதனை புரிந்தவர். இன்றைய நிகழ்ச்சியில் உமா எந்த புடவை கட்டியிருக்கிறார், என்ன மாதிரி ப்ளவுஸ் அணிந்திருக்கிறார். எப்படி நகைகள் போட்டிருக்கிறார் என்பதற்காக பெண்கள் அந்த நிகழ்ச்சியை பார்த்தார்கள். உமாவின் கொஞ்சும் குரலுக்காக ஆண்கள் பார்த்தார்கள்.
உமா, திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையிலிருந்து விலகினார். பின்னர் சில வருட இடைவெளிக்கு பிறகு இன்னொரு சேனலில் ஆல்பம் என்ற பெயரில் பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியை நடத்தினார். 15 ஆண்டுகால அனுபவம் மிக்க உமாவுக்கு அந்த சேனலில் கிடைத்தது வெறும் அவமானம்தான். தன்னை அவமானப்படுத்திய நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது போலீசில் புகார் கொடுத்து விட்டு மீண்டும் சின்னத்திரையிலிருந்து விலகிக் கொண்டார்.
இப்போது மீண்டும் தனது சின்னத்திரை பயணத்தை தொடரவிருக்கிறார். "ஆல்பம் நிகழ்ச்சியோட ஒரு பகுதிதான் முடிந்திருக்கிறது. அடுத்த பகுதி புதுப்பொலிவுடன் தயாராகிக்கிட்டிருக்கு. வித்தியாசமான கோணத்தில் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம். மீண்டும் ஆல்பம்&2வில் ரசிகர்களை சந்திப்பேன்" என்கிறார் உமா.
உமா புகார் கொடுத்த தயாரிப்பாளர் மீது சேனல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து சமாதானமாகிவிட்ட உமா மீண்டும் உற்சாகத்தோடு வருகிறார்.