தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிரபல தயாரிப்பு நிறுவனம் பி.வி.பி. சினிமாஸ். இதன் உரிமையாளர் பொட்லூரி. ராஜபாட்டை படம் மூலம் தமிழுக்கு வந்தனர். நான் ஈ, விஸ்வரூபம் போன்ற வெற்றி படங்களை தயாரித்தனர். பல படங்கள் வெளிவரவும் உதவியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்களது தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளிவந்துள்ள படம் இரண்டாம் உலகம். இப்படத்தை சுமார் ரூ.60 கோடியில் எடுத்துள்ளனர். ஆனால் இப்போது படம் வெளியாகி தோல்வியை சந்தித்துள்ளதால் ரூ.20 கோடி வசூலையாவது தருமா...? என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்திற்கு அடைந்த நஷ்டத்தை சரிசெய்யும் வகையில், மீண்டும் இதேநிறுவனத்திற்கு செல்வராகவன் படம் இயக்கி தருவதாக செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து பி.வி.பி., நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, கொஞ்சம் கோபமடைந்து விட்டனர். ஒரு முறை செய்த தவறை இனி மீண்டும் செய்யமாட்டோம். முற்றிலும் இது தவறான செய்தி. இரண்டாம் உலகம் படத்தால் எங்களுக்கு பெரிய இழப்பு. இதுவே போதும், இனி மீண்டும் அவருடன் (செல்வராகவன்) படம் பண்ணும் ஐடியா இல்லை. மேலும் இப்படத்தால் நாங்கள் படம் கற்றுக்கொண்டோம். இனி யார் கதை சொன்னாலும் முதலில் நாங்கள் நியமித்துள்ள குழுவிடம் படம் பற்றிய முழு கதை, எவ்வளவு பட்ஜெட் ஆகும் போன்ற முழு தகவல்களையும் கொடுக்க வேண்டும். எங்கள் குழு விவாதித்து முடிவு செய்த பிறகு தான் அந்த படத்தை தயாரிக்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்வோம். இனி எங்கள் நிறுவனம் மிக சிறந்த படைப்புகளை தரும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார். தற்போது இந்நிறுவனம் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ஒன்றை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.