தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் ரெண்டு படத்தில் அறிமுகமானவர்தான் அனுஷ்கா. ஆனால், அந்த படம் தோல்வி அடைந்ததால், அடுத்தபடியாக படவாய்ப்பில்லாமல் தெலுங்கு படங்களில் நடித்தார். அங்கு அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் அடித்ததோடு, அருந்ததி மெகா ஹிட்டானது. அப்படம் தமிழிலும் சக்கைப்போடு போட்டதால் மறுபடியும் தமிழில் பிரவேசித்தார் அனுஷ்கா.
தமிழில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த வேட்டைக்காரன், சூர்யாவுடன் நடித்த சிங்கம்-2 ஆகிய படங்கள் வெற்றி பெற்றதால், அதை வைத்தே சில ஆண்டுகளாக காலம் தள்ளினார். ஆனால், அப்படங்களைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நடித்த இரண்டாம் உலகம் படத்தை அதிகப்படியாக எதிர்பார்த்தார் அனுஷ்கா. அதற்காக கடுமையாகவும் உழைத்தார். ஆனால், இப்போது படத்தின் ரிசல்ட் தோல்வியாகி விட்டதால் இனி இப்போதைக்கு கோடம்பாக்கத்துக்கு வரும் எண்ணத்தில அவர் இல்லையாம்.
ஆந்திராவில் முகாமிட்டு ராணி ருத்ரம்மா தேவி படத்தை முடித்து விட்டவர், அடுத்து ராஜமவுலியின் பாகுபலியில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இவ்விரு படங்களுக்காகவும் பழங்கால போர் வித்தைகளை பயிற்சி எடுத்து நடித்து வரும் அனுஷ்கா, ஆக்சன் காட்சிகளில் தில்லாக சண்டை போடுகிறாராம். அதைப்பார்த்து சிலர், தென்னிந்திய சினிமாவில் விஜயசாந்தி விட்டுச்சென்ற இடம் இன்னும் காலியாகவே உள்ளது. அந்த காலி இடத்தை நிரப்ப அனுஷ்காவை தவிர வேறு யாராலும் முடியாது என்று அவர் காதுபடவே சொல்கிறார்களாம்.
அதனால், ஹீரோக்கள் அளவுக்கு வெயிட்டான கதாபாத்திரங்களையும் தோளில் சுமக்கக்கூடிய ஆற்றல் கொண்ட நாம் ஏன் மரத்தை சுற்றி டூயட் பாடி திறமையை வீணடிக்க வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கி விட்ட அனுஷ்கா, நடித்து வரும் சரித்திர படங்கள் முடிந்ததும், சமூக களையெடுக்கும் ஆக்சன் கதைகளை தேடிப்பிடித்து நடிக்கும் முடிவில் இருக்கிறாராம்.