ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா என்ற பக்தி படம் ஒன்று தயாராகி வருகிறது. மகி, சரவணன் என்ற நியூபேஸ் ஹீரோக்களுடன் ஜான்வியும், திவ்யா நாகேசும் நடிக்கிறார்கள். ஜெயபால் சுவாமி டைரக்ட் செய்கிறார். முகப்பேரில் உள்ள கனக துர்கா கோவிலை சுற்றி கடந்த ஒரு மாதமாக ஷூட்டிங் நடந்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹீரோயின்கள் திவ்யா நாகேசும், ஜான்வியும் பாம்பு நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டது. டான்ஸ் மாஸ்டா சம்பத் ஹீரோயின்களை ஆட வைத்தார். "அஞ்சு தலை நாகம்மா கொஞ்சி விளையாடுதம்மா..." என்ற அந்த பாடலில் மகுடி இசை அதிகமாக இருந்தது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது கோவிலுக்குள் இருக்கும் புற்றிலிருந்து நிஜ பாம்பு ஒன்று வெளியே வர ஷூட்டிங்கை வேடிக்ககை பார்த்தவர்களும், யூனிட் ஆட்களும் அலறி அடித்து ஓடினார்கள். பின்னர் கோவில் பூசாரி வந்து பாம்பை விரட்டிய பிறகே மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது.