தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் நடிகை ராதிகா. என்றாலும் சித்தி என்ற சின்னத்திரை தொடர் அவரை தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு வீடுதோறும் கொண்டு சென்றது. அதுவரை ராதிகாவை நடிகையாக மட்டுமே பார்த்தவர்கள், அதையடுத்து தங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்று பார்க்கத் தொடங்கினர். இதனால் தனது ராடான் டிவி மூலம் தொடர்ந்து டி.வி தொடர்கள் தயாரித்து அதில் தான் கதாநாயகியாக நடித்து வருகிறார் ராதிகா.
இந்நிலையில், தற்போது வாணி ராணி என்ற தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார். சாதாரணமாக தொடர்களின் கதைக்களம் குடும்பங்களைச்சார்ந்தே இருப்பதால், ஒரே வீடுகளிலேயே படமாக்கி வருவார்கள். ஆனால், இந்த வாணி ராணி தொடரில் படப்பிடிப்பை தற்போது சினிமா படப்பிடிப்பு போன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் சென்று படமாக்கி வருகிறார் ராதிகா.
அப்போது நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், டி.வித் தொடர்கள் பெண்களை இலக்காக வைத்தே உருவாகி வருவதால், பெரும்பாலும் குடும்பப்பிரச்னைளுக்கே முதலிடம் கொடுக்கிறோம். குறிப்பாக, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தியே நான் தயாரித்து நடிககிற தொடர்கள் இருந்து வருகிறது.
குடும்பங்களில் நடைபெறும் அன்றாட பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு அளிக்கும்வகையில் காட்சிகள் அமைக்கப்படுவதால் பெண்கள் மத்தியில் எனது தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால் அவர்களுக்கு போரடித்து விடாத வகையில் கதை மற்றும் காட்சிகளை சுவராஸ்யம் குறையாமல் நகர்த்தி வருகிறோம் என்று சொல்லும் ராதிகா, ஒரு சினிமா என்பது இரண்டரை மணி நேரம் மட்டுமே.ஆனால், டி.வித் தொடர் என்பது வருடக்கணக்கில் எடுககப்படுகிறது. அதனால், சினிமாவை விட சீரியல்களுக்காகவே அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது என்கிறார்.