'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோடம்பாக்கத்தில் புதுமுக நடிகைகளின் வருகை அதிகரித்து வருவதோடு, ஏற்கனவே வளர்ந்து கொண்டிருக்கும் நடிகைகள் சிலர் படத்துக்குப்படம் தங்களது சம்ளத்தை உயர்த்திக்கொண்டே செல்கின்றனர். இதில் ப்ரியாஆனந்த், எதிர்நீச்சல் என்ற ஒரு படத்தை முன்வைத்தே தடாலடியாக படக்கூலியை அதிகப்படுத்திக்கொண்டே வந்தார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் அவரிடம் பேசிக்கொண்டிருந்த சிறிய பட்ஜெட் பட நிறுவனங்கள், இவர் நமக்கு செட்டாக மாட்டார் என்று எஸ்கேப்பாகின. இதனால் பென்சில் உள்பட இரண்டு படங்கள் ப்ரியாஆனந்திடமிருந்து நழுவிச்சென்றன. அதனால், தற்போது அதர்வாவுடன் இரும்புக்குதிரை, கெளதமுடன் வை ராஜா வை படங்களில் நடித்து வரும் ப்ரியாஆனந்த், அடுத்தடுத்து புதிய படங்கள் எதுவும் தன்னை தேடி வராததால் அதிர்ச்சியில் இருக்கிறார்.
இந்நிலையில், லட்சுமிமேனன், நஸ்ரியா, ஸ்ரீதிவ்யா போன்ற வளர்ந்து வரும் நடிகைகள் சம்பள விசயத்தில் எக்குதப்பாக பேசுவதில்லை. இதுதான் சம்பளம் என்று படாதிபதிகள் தீர்மானிப்பதை வாங்கிக்கொண்டு வருகிறார்கள் என்றொரு செய்தி பரவியிருக்கிறது. இதனால் தன்னைப்பற்றி எழுந்திருக்கும் அதிருப்தி செய்தி தனது மார்க்கெட்டுக்கு உலை வைத்து விடுமோ என்று அஞ்சும் ப்ரியாஆனந்த், நான் யாரிடத்திலும் அதிகமான சம்பளம் கேட்டதேயில்லை. எனது வளர்ச்சியை தடுக்க யாரோ இப்படியொரு வதந்தியை பரப்பி விட்டுள்ளார்கள் என்று, தான் சந்திக்கும் புதிய படாதிபதிகளிடம் பிளேட்டை மாற்றிப்போட்டு வருகிறார்.