டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆட்டோகிராப் படத்தில் தமிழுக்கு வந்த மலையாள நடிகை கோபிகா, அதன்பிறகும் பல படங்களில் நடித்து குடும்ப நடிகை என்றொரு இமேஜை ஏறபடுத்தி வைத்திருந்தவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார்.
அவரைத் தொடர்ந்து, கேரளாவிலிருந்து புற்றீசல் போல் கோடம்பாக்கத்துக்கு படையெடுத்துக்கொண்டிருக்கும் நடிகைகளில் பலருக்கு கோபிகா இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தபோதும், யாரும் அதை வெளிப்படையாக சொன்னதில்லை. ஆனால் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் தமிழுககு வந்து துரோகி, வித்தகன் உள்பட பல படங்களில் நடித்த பூர்ணா, அதுபற்றி ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார்.
அதாவது, நான் தமிழுக்கு வந்தபோது என்னை அடுத்த அசின் என்றார்கள். ஆனால், நானோ கோபிகாவின் தீவிர ரசிகை. அதனால் அவர் விட்டுச்சென்ற இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்து வருகிறது. நான் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் அந்த இடம் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.
ஆனால், இப்போது நடித்துள்ள ஜன்னல் ஓரம், தகராறு படங்களில் அந்த இடம் எனக்கு கிடைக்கும். கோபிகா நடிப்பது போன்றே குடும்பப்பாஙகான, யதார்த்தமான வேடங்களில் இந்த படங்களில் நடித்திருக்கும் நான், அடுத்த கோபிகா என்று சொல்லும் அளவுக்கு பர்பாமென்ஸ் கொடுத்திருக்கிறேன் என்கிறார்.