டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஐந்து முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் நேர் எதிர்.
கலைப்புலி எஸ். தாணு வின் வி கிரியேஷன்ஸ் வழங்கும் தி மூவி ஹவுஸ் எண்டர்
டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
கேயாரிடம் 12 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் கற்ற எம். ஜெயபிரதீப் இயக்கியுள்ளார்.
ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா, எம். எஸ். பாஸ்கர், இவர்களுட ன் பார்த்தி
அறிமுகமாகிறார்.
நேர் எதிர் ஒரு முழு நீள சஸ்பென்ஸ் த்ரில்லர். முழுக்க முழுக்க இதன் கதை
இரவிலேயே நடக்கிறது. ஒரு காட்சி கூட பகலில் எடுக்கப் படவில்லை.
அது என்ன நேர் எதிர்? வழக்கமான நாயகன் வில்லன் மோதலா என்றால், மறுக்கிறார்
இயக்குநர்.
உலகில் எல்லா விலங்குகளும் அதனதன் சுபாவத்தில் சரியாகவே இருக்கின்றன. சிங்கம்
புல் தின்னாது; வேட்டையாடவே செய்யும். நாய் முனகாது; குரைக்கவே செய்யும். பூனை
குரைக்காது; மியாவ் என்றே கத்தும். பாம்பு கொஞ்சாது; சீறவே செய்யும். ஆனால்
மனிதன் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கிறான்.
ஒரு மனிதன் எப்போது புலி போல பதுங்குவான்,எப்போது சிங்கம் போல வேட்டையாடுவான்
என்று யாருக்கும் தெரியாது. எப்போது நரித்தனம் செய்வான், எப்போது பாம்பு போல
விஷத்தைக் கக்குவான் என்று யாருக்குமே தெரியாது. எல்லா விலங்குகளின்
குணத்தையும் தன்னுள்ளே கொண்டவனாக இருக்கிறான்.
ஒருவனைப் பற்றி உலகில் மற்றவர் நினைத்து நம்பி இருக்கும் எண்ணத்துக்கு நேர்
எதிர் ஆக அவன் இருக்கிறான். இந்த சுபாவ முரண்பாடுகளை எடுத்துக்கொண்டு
சுவாரஸ்யப்படுத்தி உருவாகியுள்ள படம்தான் நேர் எதிர்.
படத்தில் வரும் 5 பாத்திரங்கள் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று புரியாதபடி
காலம் நடத்தும் ஆட்டம்தான் திரைக்கதை.
இன்றைய யதார்த்த உலகில் நாகரிகம் என்ற பெயரில் நடக்கும் கூத்துகளும்
போக்குகளுமே கதைப் பின்னணி.
இப்படத்துக்காக ஏவி எம் ஸ்டுடியோவில் ஒரு பெரிய செட் போடப்பட்டு பெரும்பாலான
காட்சிகள் அதில் படமாகியுள்ளன. மூன்று மாடிகள் கொண்ட இந்த செட் 75 லட்ச ரூபாய்
செலவில் போடப் பட்டுள்ளது.
தற்காலச் சூழலில் தவறு எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை படம்
பிடித்துக்காட்டும் கதை. காதல், நட்பு எல்லாம் இணைந்த சஸ்பென்ஸ். அடுத்தது
என்ன என்று ஊகிக்க, நம்ப முடியாத திருப்பங்களுடன் கதை பயணிக்கும்" என்கிற
இயக்குநர் ஜெயபிரதீப், இது ஆபாசம் அருவருப்பில்லாத படமாக இருக்கும் என்று
உத்திர வாதம் தருகிறார்.
நேர் எதிர் ஒரு நகரம் சார்ந்த கதை. ஏவி.எம். செட் தவிர சென்னையில் முக்கிய
சாலைகள், ஹோட்டல்கள், கிழக்கு கடற்கரை சாலை போன்ற இடங்களிலும் படமாகீயுள்ளது.
படத்தில் 5 பாடல்கள். இசை சதீஷ் நாராயணன். இவர் ஏ.ஆர். ரஹ்மானின்
மாணவர்.ஏற்கெனவே கனிமொழி லீலை இசைய மைத்தவர். இப்படத்தின் பின்னணி இசையும்
பேசப்படும்
அறிவுமதி, அறிமுக கவிஞர் கமலக்கண்ணன் ஆகியோருடன் ஜெயபிரதீப்பும் பாடல்
எழுதியுள்ளார். ஸ்ரேயா கோஷல், நீத்தி மோகன், பிரபல பாப் சிங்கர் லண்டன் ஹர்ஷி
போன்றவர்கள் பாடியுள்ளனர்.
ஒளிப்பதிவு ராசாமதி. இவர் கவிஞர் அறிவுமதியின். மகன். சித்து+2.போன்ற
படங்களில் பணியாற்றியவர். கலை அறிமுகம் மாயாபாண்டி எடிட்டிங் கோபி கிருஷ்ணா.
இவர் ஏற்கெனவே வழக்கு எண் 18/9 குட்டிப்புலி மனங்கொத்திப் பறவை
படங்களில் பணியாற்றியவர்.
நேர் எதிர்படத்தை தி மூவி ஹவுஸ் எண்டர்டெய்ன் மெண்ட் நிறுவனம்
தயாரித்துள்ளது.படத்தைப் பார்த்த கலைப்புலி எஸ். தாணு, அதன் நிறமும், தரமும்
பிடித்துப் போகவே தன் வி கிரியேஷன்ஸ் சார்பில் வாங்கி வெளியிடுகிறார். வி
கிரி யேஷன்ஸ் சம்பந்தப் பட்டதுமே படத்துக்கு வெளிச்சம் அதிகரித்துவிட்டது.
பிரமாண்டம் கூடி விட்டது.
நேர் எதிர் டிசம்பர் வெளியீடு.