பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சுந்தர்.சி தனது அக்மார்க் காமெடி முத்திரையுடன் இயக்கிய படம் கலகலப்பு. விமல், சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடித்திருந்த அப்படம் சுந்தர்.சிக்கு வெற்றியை கொடுத்ததால் அவரது மார்க்கெட் மறுபடியும் சூடு பிடித்தது. அதோடு, அதில் நடித்திருந்தவர்களுக்கும் புதிய படவாய்ப்புகள் கிடைத்தன.
இந்நிலையில், அதையடுத்து மதகஜராஜா, தீயா வேலை செய்யனும் குமாரு படங்களை இயக்கிய சுந்தர்.சி., இப்போது அரண்மனை என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். இதன்பிறகு கலகலப்பு படத்தின் இரண்டாம பாகத்தை இயக்குகிறாராம். அந்த படத்தில் மிர்சி சிவா நடிப்பது உறுதியாகி விட்டதாம். மற்ற நடிகர், நடிகைகளில் யார் யார் நடிக்கிறார்கள் என்கிற விவரங்கள் அரண்மனை முடிந்ததும் வெளியாகுமாம்.
கலகலப்புக்கு பிறகு சிவா நடித்த, தில்லு முல்லு, சொன்னா புரியாது, யா யா, வணக்கம் சென்னை என எந்த படங்களும் வெற்றி பெறாததால், கலகலப்பு-2 படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறாராம். அதோடு, அடுத்த பாகத்தில் இன்னும் வயிறை புண்ணாக்கும் காமெடி கதையை சுந்தர்.சி உருவாக்கயிருப்பதால், காமெடியில் தன்னை இன்னும் மெருகேற்றி நடிக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறாராம் மிர்சி சிவா.