தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விமல் நடித்த களவாணி படத்தில் தமிழுக்கு வந்தவர் ஓவியா. அதற்கு முன்புவரை ஹெலன் என்ற பெயரில் மலையாள படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த அவரை ஓவியாவாக மாற்றியவர் களவாணி டைரக்டர் சற்குணம். முதல் படமே ஹிட் என்றபோதும், ஓவியாவிற்கு தமிழில் பிரகாசமான எதிர்காலம் அமையவில்லை. என்றாலும், அதன்பிறகு கலகலகப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, மூடர்கூடம் என சில படங்களில் நடித்து தன்னை தக்க வைத்துக்கொண்டு வந்த ஓவியா, தற்போது மதுரை கதைக்களத்தில் உருவாகியுளள மதயானைக்கூட்டம் என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். கேரளாவில் இருந்து வந்து மதுரையில் குடியிருக்கும் பெண்ணாக நடித்துள்ள ஓவியா, படம் முழுக்க கேரளா காஸ்டியூமிலேயே வளைய வருகிறாராம்.
இப்படத்தில் நடித்தது பற்றி அவர் கூறுகையில், அதிரடியான ஆக்சன் படம் என்றாலும், அதற்குள்ளும் ஒரு மென்மையான காதல் கதையும் உள்ளது. அதில்தான் நானும், புதுமுக நடிகர் கதிரும் நடித்திருக்கிறோம். இதுவரை நான் நடித்த காதல் படங்களில் இந்த படத்தின் காதல் ரொம்ப டச்சிங்காக இருக்கும். அதோடு, இனி என்னை நம்பி அழுத்தமான கதாபாத்திரங்களை தமிழ் டைரக்டர்கள் தருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவிக்கும் ஓவியா, நான் மலையாள நடிகையாக இருந்தபோதும், எனக்கு முதலில் கதாநாயகி அங்கீகாரம் கொடுத்தது தமிழ் சினிமாதான். இன்றுவரை தமிழ்நாட்டு ரசிகர்கள்தான் எனக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடுதான் என்னை வாழ வைத்திருக்கிறது என்கிறார் நெகிழ்ச்சியுடன்.