ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்புவை காதலிக்கிறேன் ஆனால் 5 வருடம் கழித்துதான் திருமணம் என்று ஒரு ஸ்டேட்மென்டை கொடுத்து விட்டு புதிய படங்களில கமிட்டாகி ராத்திரி பகலாக நடித்துக்கொண்டிருக்கிறார் ஹன்சிகா. இந்த நிலையில், அவர்களுக்கிடையே கோடு கிழித்து விடும் வேலைகளும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால், எங்க காதல் டபுள் ஸ்ட்ராங்க். யாரும் எங்களை துண்டாட முடியாது என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நேரத்தில், 7 வருடங்களுக்குப்பிறகு தனது மாஜி காதலி நயன்தாராவுடன் மீண்டும் சிம்பு ஜோடி சேரப்போகிறார் என்ற செய்திதான் ஹன்சிகா வட்டாரத்தை தூக்கிவாரிப்போட்டிருப்பதாக செய்திகள் பரவிக் கிடக்கிறது. அதோடு, நயன்தாராவுடன் சிம்பு மறுபடியும் ஜோடிசேரப்போவதை காரணம் காட்டி காதலை ஹன்சிகா பிரேக் அப் செய்து விட்டதாகவும் பரபரப்பு செய்திகள் உலவுகின்றன.
ஆனால் இதுபற்றி ஹன்சிகாதரப்பை விசாரிக்க தொடர்பு கொண்டால், அவரது தாய்குலம், நோ கமெண்ட்ஸ் சொல்லி போனை கட் பண்ணி விட்டார். ஆனால் விடாமல் துரத்தியபோது கடைசியாக லைனில் வந்த ஹன்சிகா, சிம்பு, நயன்தாரா இருவரும் மாஜி காதலர்கள் என்பது எனக்கும் தெரியும். ஆனபோதும், இப்போது அந்த படத்தின் கதைக்கு அவர்கள்தான் பொருத்தமாக இருப்பார்கள் என்கிறபோது சேர்ந்து நடிப்பதில் எந்த தவறும் இல்லை.
மேலும், யாராக இருந்தாலும் சினிமாவில் நடிக்க வந்தபிறகு சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்து விட வேண்டும். பிடிக்காதவர்களாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கேற்ப பிடித்தது போல் நடிக்க வேண்டும். தொழிலை மதிப்பவர்கள் யாராக இருந்தாலும் இதைத்தான் செய்வார்கள். அதனால் நயன்தாராவுடன் சிம்பு இணைந்து நடிப்பதை ஒரு நடிகையாய் நான் வரவேற்கிறேன். எனக்கு எந்தவித ஆட்சேபனையும இல்லை என்கிறார் ஹன்சிகா.