டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரளா, தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்த நடிகைகளில் பூர்ணாவும் ஒருவர். பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் ஆரம்பத்தில் மட்டுமின்றி இப்போதுவரை இவர் நடித்த எந்த படங்களும் ஓடியதில்லை. அதனால், தோல்விப்பட நடிகை என்ற முத்திரையுடன் சினிமாவில் இருந்து வருகிறார் பூர்ணா.
இதனால் சில ஆண்டுகளாக தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவர், தற்போது ஜன்னல் ஓரம், தகராறு உள்பட சில புதிய படங்களை கைப்பற்றி மீண்டும் கோடம்பாக்கத்தில் பிரவேசித்துள்ளார். இந்த முறை நான் தோற்க மாட்டேன். காரணம் எனக்கு கிடைத்திருக்கிற கதைகளும், ஹீரோக்களும் வெற்றியாளர்கள். அதனால் அவர்கள் புண்ணியத்தில் நானும் ராசியான நடிகையாகி விடுவேன் என்கிறார் பூர்ணா.
சரி இரண்டாவது ரவுண்டில் இளவட்ட ரசிகர்களை குஷிபடுத்தும் ஐடியா ஏதேனும் உள்ளதா? என்று அவரைக்கேட்டால், இளவட்ட ரசிகர்களை கலகலப்பான, கிளுகிளுப்பான நடிப்பால் குஷிபடுத்த தயாராக இருக்கிறேன். ஆனால், ஆபாசமாக நடித்து குஷிபடுத்த தயாராகயில்லை. காரணம், பெண்கள் படுகவர்ச்சியாக உடையணிவதால்தான் இளவட்ட ரசிகர்கள் தவறான மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதனால்தான் நாட்டில் பல இடங்களில் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது.
இதை சாதாரண பெண்கள் மட்டுமின்றி, சினிமாவில் நடிப்பவர்கள் செய்தாலும் தவறு என்பது என் கருத்து. அதனால் காசு சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சமுதாயத்தை கெடுக்கும் செயல்களில் ஒருபோதும் ஈடுபடமாட்டேன் என்கிறார் பூர்ணா.