ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வம்சம், மெளனகுரு படங்களைத் தொடர்ந்து அருள்நிதி நடிக்கும் படம் தகராறு. இந்த படத்துக்கு டைட்டீல் வைப்பதில் ஆரம்பத்திலிருந்தே தகராறுதானாம். நான்கு திருடர்களைப்பற்றிய கதை என்பதால் பகல் கொள்ளை என்று வைத்தார்களாம். ஆனால், அருள்நிதி கருணாநிதியின் பேரன் என்பதால், அதை வைத்தே ஆளாலுக்கு கலாய்ப்பார்கள் என்பதால், டைட்டிலை மாற்ற பல மாதங்களாக யோசித்து வந்தார்களாம். தினம் தினம் ஒரு பேப்பரில் தனக்கு தோன்றும் டைட்டில்களாக எழுதி வந்து கொடுத்தாராம் இயக்குனர். ஆனால், அப்படி கொடுத்த டைட்டில்கள் யாருக்குமே பிடிக்காமல் போக, என்ன இது இந்த படத்துக்கு டைட்டில் ரெடி பண்றதுல ஆரம்பத்தில இருந்தே தகறாரா இருக்கே என்று ஒருவர் சொல்ல, இதுவே நல்லாயிருக்கே. படத்துல அங்கங்க போயி தகராறு பண்ற ஆளாதானே அருள்நிதி நடிக்கிறாரு என்று முடிவு செய்து அதையே உறுதிபடுத்தி விட்டார்களாம்.
இந்த படத்தில் இதுவரை பார்த்த அருள்நிதியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நடிகரை பார்க்கலாமாம். ஆக்சன், காதல், காமெடி என்று அனைத்து ஏரியாவிலும் கலந்துகட்டி அடித்திருக்கிறாராம் அருள்நிதி. அதோடு, காதல் காட்சிகளில் பூர்ணாவிடம் ரொம்பவே வழிந்திருக்கிறாராம். இதற்கு முந்தைய படங்களை விட இந்த படத்தில் கொஞ்சம் ரியலான கொஞ்சல், கெஞ்சல் என காதல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறாராம்.
இதுபற்றி பூர்ணா கூறுகையில், அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று சொன்னதும். அவரது உயரம்தான் முதலில் என் கண்முன்னே வந்தது. ரொம்ப உயரமாக இருப்பாரே அவருக்கு ஜோடியாக குள்ளமான நாம் நடித்தால் காமெடியாகி விடுமோ என்றுதான் பயந்தேன். ஆனால், அநத குறை எதுவும் தெரியாத அளவுக்கு கேமராமேன் படமாக்கி விட்டார்.
மேலும், இந்த படத்தின் ஸ்பெஷலே அருள்நிதியோட ஸ்மைல்தான். எப்போது என்னைப்பார்த்தாலும் அந்த ஸ்மைலைதான் வெளிப்படுத்துவார். அது ரொம்ப க்யூட்டாக அழகாக இருக்கும். கதைப்படி அவரது சிரிப்பில் மயங்கித்தான் நான் அவரை காதலிக்கவே தொடங்குவேன் என்று கூறும் பூர்ணா, தகராறு படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றபோது, அந்த சிரிப்பை பத்திரிகையாளர்களிடமும் ஒரு முறை சிரித்துக்காட்டும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், இப்போது எனக்கு மூடு இல்லை என்று வெட்கத்துடன் மறுத்து விட்டார் அருள்நிதி.