டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இசை அமைப்பாளர் பரத்வாஜ் வேகமாக வளர்ந்து வந்த இசை அமைப்பாளர். திடீரென கடந்த 3 வருடங்களாக சினிமாவுக்கு இசை அமைப்பதை விட்டுவிட்டார். அதற்கான காரணம் இப்போது வெளியாகி இருக்கிறது. அவர் திருக்குறளில் உள்ள 1330 குறளையும் ராகத்தோடு பாடலாக்கி இருக்கிறார். அதனை 500 பாடகர்களை கொண்டு பாடவைத்து ஆல்பமாக தயாரித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: சினிமாவுக்கு இசை அமைக்கும்போது பணம் நிறைய கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் இசை பயின்றதற்கு ஆத்ம திருப்திக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தபோதுதான் இந்த திருக்குறள் முயற்சியை கையில் எடுத்தேன். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பால்களுக்கும் தனித்தனி ராகங்கள் அமைத்து அதை தனித்தனி பகுதிகளாக உருவாக்கி இருக்கிறேன். உலகம் முழுவதும் பயணம் செய்து தமிழ் பாடகர்களை தேடிக் கண்டுபிடித்து 500 பேரை இதில் பாட வைத்திருக்கிறேன். திரைப்பட முன்னணி பாடகர், பாடகிகளும் பாடியிருக்கிறார்கள்.
எதையும் வார்த்தையால் சொல்வதை விட இசையால் எளிமையாக சொல்லும்போது அது
மக்களை சென்று சேரும். அதற்குத்தான் இந்த பணியில் இறங்கினேன். ஓலைச் சுவடிகளில் இருந்த திருக்குறள் கல்வெட்டுக்களானது. கல்வெட்டிலிருந்து அச்சு வடிவத்திற்கு வந்தது. இது அடுத்த கட்டம். எதிர்கால சந்ததியினருக்கு திருக்குறளை எடுத்துச் செல்லும் முயற்சி இது. வருகிற ஜனவரி 17ந் தேதி திருவள்ளுவர் தினத்தன்று இதனை வெளியிடுகிறேன் என்றார் பரத்வாஜ்.