தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மறைந்த, பிரபல தமிழ் நடிகை, ஸ்ரீவித்யாவின் இறப்பை தடுத்திருக்க முடியும் எனவும், அவருக்கு விலை உயர்ந்த மருந்துகள் வாங்கிக் கொடுக்க, அவரின் அறக்கட்டளை தயாராக இல்லை எனவும், புத்தகம் ஒன்றில் வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
பல தமிழ் படங்களில் கதாநாயகியாகவும், குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ள ஸ்ரீவித்யா, இறந்து சிலஆண்டுகள் ஆகிறது. அவருக்கு, புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக
கூறப்பட்டது. இந்நிலையில், அவரின் நோய்க்கு சிகிச்சை அளித்த, டாக்டர் எம்.கிருஷ்ணன் நாயர் என்பவர், புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நடிகைக்கு இருந்த நோய் குறித்தும், அவரின் உயிரை காப்பாற்ற, விலை உயர்ந்த மருந்துகளை வாங்கித் தர, அவரின் அறக்கட்டளை முன்வரவில்லை எனவும் கூறியிருந்தார்.இதனால், தமிழ் மற்றும் மலையாள படவுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவித்யா பெயரிலான அறக்கட்டளையை, மலையாள நடிகரும், முன்னாள் அமைச்சருமான, கே.பி.கணேஷ்குமார் நிர்வகித்து வருகிறார்.அவரிடம் இது குறித்து கேட்ட போது, வெளியாகியுள்ள தகவல் மொத்தப் பொய். நாங்கள் மருந்து வாங்கிக் கொடுக்க தயாராக இல்லை என்பதில் உண்மையில்லை. மருந்தை மாற்றினால், பக்கவிளைவுகள் விபரீதமாக இருக்கும் என, ஸ்ரீவித்யா தான் மறுப்பு தெரிவித்து வந்தார், என, கூறியுள்ளார்.