ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உன்னைப்போல் ஒருவன் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு யாவரும் கேளீர் என்று பெயரிட்டுள்ளனர். தசாவதாரம் படத்திற்கு பிறகு இந்த படத்திற்காக கே.எஸ்.ரவிக்குமாருடன் கை கோர்த்திருக்கிறார் கமல்ஹாசன். உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ஸ்ருதி கமல் இசையமைக்கிறார். தமிழ் கவிஞர் கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே... யாவரும் கேளீர் என்ற வரிகளில் இருந்து தலைப்பை தேர்ந்தெடுத்தார்களாம். விரைவில் சூட்டிங் தொடங்கவிருக்கிறது. விறுவிறுவென சூட்டிங்கை நடத்தி 2010 மத்தியிலேயே இப்படத்தை ரீலிஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம் ரெட்ஜெயண்ட் மூவிஸ். கமல்ஹாசனை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்று ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த கனவு யாவரும் கேளீர் படத்தின் மூலம் பலித்து விட்டது என்கிறது தயாரிப்பு தரப்பு.