த்ரிஷாவுக்கு சச்சின் கொடுத்த பரிசு! | அதிகாரிகள் தான் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்! ஷாரூக் | விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் வழங்கிய அமிதாப்பச்சன்! | டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா! | ரஜினியின் அடுத்த படம் கே.வி.ஆனந்துடன்?! | கார்த்தி பிறந்தநாளில் சகுனி சிங்கிள் ஆடியோ டிராக் ரிலீஸ்! | ஷாரூக்கானுக்கு வாழ்நாள் தடை! | முடிவுக்கு வருமா பெப்சி தொழிலாளர்கள் சம்பளப்பிரச்னை....? இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை | எடியூரப்பா மகனுக்கும் எனக்கும் தொடர்பில்லை! நடிகை ஹரிப்பிரியா! | கொச்சியில் நடிகை உதயதாரா திருமணம் முடிந்தது! |
உன்னைப்போல் ஒருவன் வெற்றிக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு யாவரும் கேளீர் என்று பெயரிட்டுள்ளனர். தசாவதாரம் படத்திற்கு பிறகு இந்த படத்திற்காக கே.எஸ்.ரவிக்குமாருடன் கை கோர்த்திருக்கிறார் கமல்ஹாசன். உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ஸ்ருதி கமல் இசையமைக்கிறார். தமிழ் கவிஞர் கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே... யாவரும் கேளீர் என்ற வரிகளில் இருந்து தலைப்பை தேர்ந்தெடுத்தார்களாம். விரைவில் சூட்டிங் தொடங்கவிருக்கிறது. விறுவிறுவென சூட்டிங்கை நடத்தி 2010 மத்தியிலேயே இப்படத்தை ரீலிஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம் ரெட்ஜெயண்ட் மூவிஸ். கமல்ஹாசனை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்று ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த கனவு யாவரும் கேளீர் படத்தின் மூலம் பலித்து விட்டது என்கிறது தயாரிப்பு தரப்பு.
தனித்திறமை காண்பிக்கறேன் என்று மத்த தயாரிப்பாளர்களை ரத்த கண்ணீர் விட வைத்த கதை திமுக குடும்பத்தாரிடம் எடுபடாது! ஜாக்கிரதை !!!!