ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
பாலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் விவேக் ஓபராய். ஒரு காலத்தில் ஐஸ்வர்யாராயின் காதலர். தமிழ் நாட்டை சுனாமி தாக்கியபோது ஓடோடி வந்து வீடு கட்டிக் கொடுத்தவர். இந்திப் படத்தில் நடித்தாலும் விவேக் ஓபராய், கோயம்புத்தூர் கொங்கு தமிழர். ஆனைமலை மாசாணி அம்மன் குல தெய்வம். ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த விவேக் ஓபராய் இப்போது கிரிஷ் 3 படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.
ஒரு சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே அவர் காட்டும் வில்லத்தனம் இப்போது உலகம் முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. தான் வில்லனாக நடித்தது ஏன் என்பதற்கு ரஜினியை பார்த்துதான் வில்லனாக நடிக்கும் துணிச்சல் பெற்றேன் என்கிறார். "ஒரு படத்தில் கொடூர வில்லனாகவும், நல்லவானகவும் நடிக்கிறார். அதனை இருகோணத்திலும் மக்கள் ரசிக்கிறார். அந்த மாயாஜாலத்தை அவரிடம கற்றுக் கொண்டேன்" என்கிறார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது: "வில்லனாக நடிப்பதற்கு துணிச்சல் வேண்டும். வில்லனாக நடிப்பது நீண்ட நாள் கனவு. அது இப்போது நிறைவேறியிருக்கிறது. நீ எப்படிடா இவ்ளோ கொடூரமானவனா நடிச்சேன்னு வீட்டுல எல்லோரும் சொல்லும்போது சந்தோஷமாக இருக்கிறது. தொடர்ந்து வில்லனாக நடிக்கும் எண்ணம் இல்லை. அடுத்து 4 படங்களில் ஹீரோவாகத்தான் நடிக்கிறேன் என்கிறார் விவேக் ஓபராய்.