தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புதுமுக இயக்குநர் ஜெயவேல் இயக்கத்தில், பாலாஜி, ஜெய் குகேனி நடித்துள்ள படம் மெய்யழகி. அக்கா-தம்பி இடையே உள்ள பாசப்போராட்டத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஆர்.பி.செளத்ரி, விக்ரமன், தேவயானி, மதன்பாபு உள்ளிட்ட திரைபிரபலங்கள் கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டனர். விழாவில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் திரையிடப்பட்டன. அதில் மனவளர்ச்சி குன்றிய கதாபாத்திரத்தில் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் பாலாஜி. அவரது நடிப்பை பார்த்துவிட்டு மேடையிலேயே ஏராளமானபேர் பாலாஜியை பாராட்டினர்.
விழாவில் பேசிய தேவயானி, பாலாஜியின் நடிப்பை பார்த்துவிட்டு மிரண்டு போய்விட்டேன். உண்மையாக உடல்நலம் சரியில்லாத பையன் படத்தில் நடித்திருப்பது போன்று தோன்றியது. நான் அழுது ரொம்ப நாளாகிவிட்டது, ஆனால் பாலாஜியின் நடிப்பையும் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பார்த்துவிட்டு என்னை அறியாமலயே கண்கலங்கிவிட்டேன். அந்தளவுக்கு அவரது நடிப்பு என்னை பாதித்துவிட்டது. அவர் இன்னும் பல உயரங்கள் போக நான் வாழ்த்துகிறேன். இப்போது வரும் படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள், தண்ணி அடிக்கும் காட்சிகள், பெண்களை தரக்குறைவாக பேசும் காட்சிகள் தான் அதிகமாக இடம்பெறுகிறது. ஆனால் இதிலிருந்து மாறுபட்ட படம் மெய்யழகி. சின்ன பட்ஜெட்டுல ரொம்ப நல்ல படத்தை கொடுத்திருக்காங்க. இதுபோன்ற படங்களுக்கு பத்திரிகையாளர்கள் ரொம்ப சப்போர்ட் பண்ணனும் என்று கேட்டு கொண்டார் தேவயானி.