Advertisement

சிறப்புச்செய்திகள்

'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனி கம்ப்யூட்டர் பாட்டு எழுதும்: புதிய மென்பொருளை கண்டுபிடித்தார் மதன் கார்க்கி

12 நவ, 2013 - 12:56 IST
எழுத்தின் அளவு:

வைரமுத்து மகன் மதன் கார்க்கி இப்போது சினிமாவில் மோஸ்ட் வாண்டட் பாடலாசிரியர். சிறிய படம் பெரிய படம் எதுவாக இருந்தாலும் பாடல் எழுதக்கூடியவர். இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்காமல் கொடுப்பதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு பாடல் எழுதுவார். அடிப்படையில் மதன் கார்க்கி ஒரு கம்ப்யூட்டர் பொறியாளர். அண்ணா பல்கலை கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றிவர். தற்போது வேலையை ராஜினாமா செய்து விட்டு முழுநேர பாடலாசிரியராகி விட்டார்.

மதன் கார்க்கி ஏற்கெனவே தனது கார்க்கி ரிசர்ச் செண்டர் மூலம் தமிழ் அகராதி, ஒலிங்கோ என்னும் டிரான்ஸ்லேட்டர், சர்ச் பிலிம் சாங் போன்ற மென்பொருளை உருவாக்கி அதை பயன்பாட்டுக்கு விட்டுள்ளார். இப்போது ஒரு திரைப்படத்தில் பாடல் வரும் சூழ்நிலையை பதிவேற்றம் செய்தால் கம்ப்யூட்டரே பாடல் எழுதித்தரும் மென்பொருளை உருவாக்கி இருக்கிறார்.

இதுகுறித்து மதன் கார்க்கி கூறியிருப்பதாவது: சினிமா பாட்டு கவிஞனின் ஆன்மாவிலிருந்து எழுதப்படுவதல்ல. கதை, காட்சி, மெட்டுக்கு ஏற்ற மாதிரி எழுதப்படுவது. இதற்கு கவிஞனின் உணர்வு முக்கியமில்லை. அதற்கேற்ற வார்த்தையை தேடிக் கண்டுபிடிப்பதே முக்கியம். அதனை கம்ப்யூட்டர் செய்து விடும். காதல், தீ, பூ, உலகம், காற்று இந்த வார்த்தைகள்தான் பாடலில் அதிகம் பயன்படுத்தப்படும். எந்ததெந்த சூழ்நிலைக்கு எந்த வார்த்தைகள் தேவைப்படும் என்பதை முடிவு செய்து இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. சூழ்நிலையை பொருத்தினால் அது தொடர்புடைய வார்த்தைகளை இணைத்து பாடலாக தந்துவிடும். சின்ன திருத்தங்களை செய்தால் போதும்.

காதல் சூழ்நிலைய என் மென்பொருளுக்கு கொடுத்தபோது அது உருவாக்கி தந்த முதல் வாக்கியம் "திருவிழாவைப்போன்ற சந்தோஷம் தரும் உறவு" என்ற வாக்கியத்தை தந்தது. இதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டபோது இது என் தந்தை அல்லது வாலி எழுதிய வார்த்தை போன்று இருப்பதாகச் சொன்னார்கள். இந்த முயற்சி பாடலாசிரியர்களின் திறமையை குறைக்க அல்ல. தொழில்நுட்பத்தின் பலத்தை அவர்களுக்கு வழங்குவதற்காக என்றார்.

Advertisement
கருத்துகள் (25) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (25)

Bhaskaran. - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13 நவ, 2013 - 12:17 Report Abuse
Bhaskaran. மதன் திரு வைரமுத்துக்கு நிகர் வைரமுத்து அவர்கள்தான் இருந்தும் நீ அந்த முத்து பெற்ற முத்து என்பதில் உன் திறமைகள் பறைசாற்றுகின்றன.
Rate this:
Raja Rajan - Palakkad,இந்தியா
13 நவ, 2013 - 10:39 Report Abuse
Raja Rajan கணினி கவிதை எழுதும் என்பது ஆச்சர்யம் தான். கண்ணதாசன், வாலி,வைரமுத்து அவர்கள் எழுதிய கவிதை போல வருமா என்பது கஷ்டம் தான். ஆனால் அவர் எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள். கவிதை வெறும் வார்த்தைகளை போட்டு வருவதில்லை. அவை வாழ்க்கையை ஒட்டி வர வேண்டும்.
Rate this:
James - Brisbane,ஆஸ்திரேலியா
13 நவ, 2013 - 09:29 Report Abuse
James அப்படியே இசை அமைக்கிரத்துக்கும் ஒரு மென்பொருள் உருவாக்கி விட்டால், இசை அமைப்பாளருக்கு வேலை இல்லை. பிறகு இந்த விருது எல்லாம் யாருக்குக் கொடுப்பார்கள்? கணினிக்கா?
Rate this:
Sathya - Madurai,இந்தியா
13 நவ, 2013 - 09:26 Report Abuse
Sathya "தொழில்நுட்பத்தின் பலத்தை அவர்களுக்கு வழங்குவதற்காக"... என்றால் இதை இலவசமாக எல்லோருக்கும் கொடுக்க தயாரா? எல்லாமே காசுதாம்பா.....
Rate this:
appu - Madurai,இந்தியா
13 நவ, 2013 - 08:57 Report Abuse
appu இங்கே பலர் நெகடிவ் மைண்டுடன் புதிய கண்டுபிடிப்புக்கு வரவேற்ப்பு கொடுக்காவிட்டாலும் மட்டமாக பேசுவது துரதிஷ்டமான ஒன்று...இயற்கைக்கும் மென்பொருள் கம்ப்யூட்டருக்கும் வித்யாசம் இருக்கலாம்....ஆனால் இந்த மென்பொருள் கண்டுபிடிப்பு என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு அங்கமே தவிர இது தான் அல்லது இது மட்டும் தான் என்ற செய்தியோ அல்லது கருத்தோ பதிவாகவில்லை என்பதை நெகடிவ் மைண்ட் கொண்டோர் உணரவேண்டும்....ஒரு வளரும் கலைஞனை வாழ்த்தாவிட்டாலும் மட்டம் தட்டாமல் இருப்பது சிறந்தது...
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in