தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியாவில் சினிமா தயாரிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் டிஜிட்டல் கேமராக்கள் வந்த பிறகு சினிமா தயாரிப்பு மிக எளிதாகிவிட்டது. ஒரே டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு 150 கோடியிலும் படம் எடுக்கிறார்கள், 50 லட்சத்திலும் படம் எடுக்கிறார்கள்.
ஒரு திரைப்படத் தயாரிப்பில் 30 சதவித செலவு பிலிமுக்குத்தான். இப்போது பிலிமில் படம் எடுப்பது கிட்டத்தட்ட வழக்கொழிந்து விட்டது. ஷங்கர் இயக்கும் ஐ படம் பிலிமில் தயாராகும் கடைசி படம் என்கிறார்கள். டிஜிட்டல் கேமரா, டிஜிட்டல் போஸ்ட் புரொடக்ஷன். டிஜிட்டல் ரிலீஸ் என்று எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் திரைப்படத் தயாரிப்பு ரொம்பவே சிம்பிளாகிவிட்டது.
அதோடு டிஜிட்டலில் இன்னொரு லாபம் இருக்கிறது. எத்தனை ரீ-டேக் வேண்டுமானாலும் போகலாம். ஆரம்பத்தில் டிஜிட்டல் கேமராவில் சில பிரச்னைகள் இருந்தது. வெளிநாட்டு குளிரான தட்பவெட்பத்தை தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டு டிஜிட்டல் கேமராக்களால் நம்ம ஊர் வெயிலை தாங்க முடியவில்லை. இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டது. தியேட்டர்களில் டிஜிட்டல் புரொஜக்ஷன் இல்லாமல் இருந்தது. இப்போது இந்த இரண்டுமே சரி செய்யப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட 75 சதவிகித தியேட்டர்கள் கியூப் சிஸ்டத்துக்கு மாறிவிட்டது. நம்ம ஊர் வெயிலை தாங்கும் டிஜிட்டல் கேமராக்கள் வந்து விட்டது.
பிலிம்களின் பயன்பாடு ஒழிந்துவிட்டது, சென்னையில் உள்ள பிரசாத், ஜெமினி லேப்புகள் மூடப்பட்டுவிட்டது. அதில் பணியாற்றிய தொழிலாளர்கள் பலர் விஆர்எஸ் கொடுக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள். சிலர் மாற்று பணிகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். திரைப்படக் கல்லூரிகள் பயிற்சி நிறுவனங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பமே கற்றுத் தரப்படுகிறது. சென்னை தரமணி எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் இருந்த பிலிம் பிராசசிங் கோர்ஸ் கைவிடப்பட்டுவிட்டது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் புண்ணியத்தால் இன்று நரிக்குறவர்கள் சினிமாகூட தயாராகும் அளவிற்கு சினிமாவின கதவுகள் திறக்கப்பட்டுவிட்டது. ஒருவருக்கு இயக்குனராகவோ, ஹீரோவாகவோ ஆக விருப்பம் இருந்தால் 50 லட்சம் ரூபாய் இருந்தால் ஆகிவிடலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது. அதனால் சினிமா தயாரிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து விட்டது.
இந்தியாவில் 2011ம் ஆண்டு 1255 படங்கள் சென்சாராகியிருக்கிறது. 2012ம் ஆண்டு 1602 படங்கள் சென்சாராகியிருக்கிறது. இதில் முதல் இடத்தில் இருப்பது தமிழ்நாடு. கடந்த ஆண்டு 262 தமிழ் படங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. தமிழுக்கு அடுத்த இடத்தில் இருப்பது தெலுங்கு படங்கள். கடந்த ஆண்டு 256 தெலுங்கு படங்கள் தணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இந்திப் படங்கள் மூன்றாவது இடம் பிடிக்கிறது. 221 படங்கள்.
இந்த ஆண்டு 275 படங்கள் வரை தணிக்கை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 250 படங்களுக்குமேல் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு போட்டியாக இருந்த ஆந்திராவில் இப்போது சினிமா உலகம் டல்லடித்துக் கிடக்கிறது. தெலுங்கான பிரச்னையால் அங்கு திரைப்படத் தயாரிப்பு குறைந்து விட்டது. இந்த ஆண்டு அது மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படலாம். இதே நிலையில் திரைப்பட தயாரிப்பு எண்ணிக்கை உயருமானால் அடுத்த ஆண்டு வெளியாகும் தமிழ் சினிமாவின் எண்ணிக்கை 300ஐ தொடும் என்கிறார்கள்.
200 படங்கள் வெளிவந்தாலும் ஜெயித்து லாபம் சம்பாதிப்பது என்னவோ 20 படங்கள்தான். தமிழ் சினிமா வளவளவென ரிலீசானாலும் ரசிகர்கள் நல்ல பொழுதுபோக்கு படங்கள், அல்லது நல்ல அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களையே வெற்றி பெற வைக்கிறார்கள்.