சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
பாலிவுட்டில் வெளியாகி வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கும் 3 இடியட்ஸ் படத்தின் கதைக்கு ஆங்கில எழுத்தாளர் ஒருவர் உரிமை கொண்டாடுகிறார். அமீர்கான், கரீனா கபூர் நடித்துள்ள 3 இடியட்ஸ் படத்தை டைரக்டர் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். படம் வெளியான முதல் வாரத்திலேயே கோடிக்கணக்கில் வசூலை வாரி குவித்தது. இந்நிலையில் 3 இடியட்ஸ் கதைக்கு உரிமை கோரியிருக்கிறார் பிரபல ஆங்கில எழுத்தாளர் சேத்தன் பகத். அவர் கூறுகையில், நான் எழுதிய பைவ் பாயிண்ட் சம் ஒன் என்ற நாவலை மையமாக வைத்துதான் 3 இடியட்ஸ் படத்தை எடுத்துள்ளனர். எனது கதையை திருடியிருக்கிறார்கள். எனவே கதைக்கான தொகையை எனக்கு தர வேண்டும், என்றார்.