இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்கில் ஹிட்டான ஆலாம் மொதலந்தி தமிழில் என்னமோ ஏதோ என்ற டைட்டிலில் ரீமேக் ஆகிறது. இதனை ரவிபிரசாத் புரொடக்ஷன் தயாரிக்கிறது. கவுதம் கார்த்திக் ஹீரோ, நிகிஷா படேல், ராகுல் ப்ரீத்தி ஆகியோர் ஹீரோயின்கள். இந்தப் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களிடையே ஈகோ பிரச்னை இருந்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ரவி தியாகராஜன் கூறியதாவது: "படத்தில் நடித்த ஒரு நிமிடம்கூட அவர்களுக்குள் எந்த ஈகோவும் வந்ததில்லை. இருவருக்குமே தெலுங்கு தெரியும் என்பதால் தங்கள் கேரக்டர் என்ன அதில் தங்கள் பங்கு என்ன என்பதும் நன்றாக தெரியும். அதனால் ஈகோ என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்றார்.
கவுதம் கார்த்திக் கூறியதாவது: "இரண்டு ஹீரோயின்களுடன் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. இரண்டு பேருடனும் நல்ல கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகி இருக்கிறது. அப்பா மாதிரி காதல் மன்னன் ஆகும் விருப்பம் இல்லை. எல்லாவிதமான கேரக்டரிலும் நடிக்க வேண்டும். கடல் படம் தோல்வி பற்றி கவலைப்படவில்லை. மணிரத்தினம் சார் மூலம் அறிமுகமானதே பெரிய பாக்கியம் என்றார்.