ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
ஆண்களை சிரிக்க வைக்க, பெண்களை இழிவு படுத்தி படங்களில் வசனக் காட்சிகளை புகுத்துவதை, நடிகர் சந்தானம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என, பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
நடிகர் ஜீவா, திரிஷா, ஆண்ட்ரியா, சந்தானம் நடிக்க, "என்றென்றும் புன்னகை படம் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை அகமது இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், வரும் காட்சி ஒன்றில், பெண் ஊழியர் ஒருவர் சந்தானத்திடம் வந்து, (நேரம் சொல்லி, அனுமதி கேட்பது போன்ற காட்சி அமைப்பு) "அஞ்சு பத்துக்கு போகட்டுமா? என, அனுமதி கேட்பார். அதற்கு சந்தானம், "ஏன் நீ நல்லாத் தானே இருக்கே; ஐநூறு, ஆயிரத்திற்கு போயேன்...என, இரட்டை அர்த்தத்தில் வசனம் பேசி கேலி செய்வார். இந்த காட்சிக்கு பெண்கள் மத்தியில் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.
மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் மகளிர் அணி நிர்வாக செயலாளர் கல்பனா விடுத்துள்ள அறிக்கையில்,"சந்தானம் எல்லா படங்களிலும் பெண்களை இழிவுப்படுத்துவது போல வசனம் பேசி வருகிறார். மது பாட்டில் கையுமாக, போதையில் அவர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசும் வசனங்கள் பெண்களை புண்படுத்தி உள்ளது. பட விளம்பர டிரெய்லரில், ஒரு காட்சியில் பெண்களை இழிவுப்படுத்துவது போல் வசனம் உள்ளது. இது போன்ற வசனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் சந்தானத்திற்கு எதிராக போராட்டம் நடத்த நேரிடும். படம் சென்சாருக்கு செல்லும் போது, பெண்களை இரட்டை அர்த்தத்தில் இழிவுப்படுத்தும், இதுபோன்ற வசனங்களை நீக்கிட வேண்டும் என, கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, படத்தின் இயக்குனர் அகமதுவை தொடர்பு கொள்ள முயன்றபோது, மொபைல்போன் "சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. படக்குழுவினரிடம் கேட்டதற்கு, "நகைச்சுவை காட்சிகளை சந்தானம் தான் எழுதி நடித்து வருகிறார். டிரெய்லர் காட்சி குறித்து ஏற்பட்டுள்ள பிரச்னை, இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் தெரியுமோ, தெரியாதோ என, எங்களுக்கு தெரியாது என்றனர்.