டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பெண் பயணிகள் பாதுகாப்பாக ரெயிலில் எப்படி பயணம் செய்வது என்பது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தென்னக ரெயில்வே தொடங்கி உள்ளது. இது தொடர்பாக பிட் நோட்டீஸ் அச்சடித்து பயணிகளுக்கு கொடுத்து வருகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகை சுஹாசினி ஸ்பெஷல் கெஸ்ட்டாக கலந்து கொண்டு பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ரெயிலில் பயணம் செய்ய எனக்கு ரொம்ப பிடிக்கும். அது ஒரு சுகமான அனுபவம். ரெயில் பயணத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். பெண்களும் ரெயில் பயணங்களில் அதிக நகை அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும். அணிந்து வரும் நகைகள் வெளியே தெரியாத வகையில் ஆடையால் மூடிக்கணும். குறைந்தபட்சம் ஆடையோடு சேர்த்து வைத்து பின் பண்ணிக்கணும். ராத்திரி நேரத்தில் ஜன்னலோரம் தூங்கிக் கொண்டு வருவதை தவிர்க்கணும். ஆள்நடமாட்டம் குறைந்த ரெயில் நிலையங்களில் தனியாக செல்லாமல் மற்ற பயணிகளோடு சேர்ந்து செல்ல வேண்டும். பயணிகள் குறைந்த பெட்டியில் தனியாக பயணம் செய்ய நேர்ந்தால் பயணிகள் நிறைந்த பெட்டிக்கு மாறிச் சென்று பயணம் செய்ய வேண்டும்.
தீபாவளிக்கு பட்டாசு வாங்கினால் அதை கண்டிப்பாக ரெயிலில் எடுத்துச் செல்லக்கூடாது. எல்லா ஊரிலும் பட்டாசு கிடைப்பதால் அந்தந்த ஊரில் வாங்கிக் கொள்ள வேண்டும். தீபாவளி நாட்களில் பட்டாசுளை வெடிக்க வேண்டாம் என்பதும் எனது வேண்டுகோளாகும். என்றார்.