டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சூர்யா அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கப்போவது உறுதியாகிவிட்டது. லிங்குசாமிதான் தயாரிக்கவும் செய்கிறார். சமந்தா ஹீரோயின், யுவன் இசை. வழக்கு எண் 18|9 படத்தை ஸ்டில் கேமராவில் எடுத்து சாதனை படைத்த லிங்குசாமி சூர்யாவின் படத்தை தற்போது வந்துள்ள அதிநவீன டிஜிட்டல் கேமராவான ரெட் டிராகனில் படமாக்க உள்ளார்.
கடந்த ஆண்டு வெளிவந்த ஆரி அலெக்ஷா என்ற அதி நவீன கேமராவை வைத்து துப்பாக்கியை ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் சிவன் இப்போது ரெட் டிராகனை வைத்து சூர்யாவை படம் பிடிக்க இருக்கிறார். இந்த கேமரா தற்போது சென்னை வரவழைக்கப்பட்டுள்ளது. பிரசாத் ஸ்டூடியோவில் இந்த கேமரா மூலம் டெஸ்ட் ஷுட் நடத்தப்பட்டது. அதன் முடிவு இயக்குனர் லிங்குசாமி, ஹீரோ சூர்யா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஆகியோருக்கு திருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம். அதனால் நம்பிக்கையோடு அடுத்த மாதம் 15ந் தேதி முதல் ஷுட்டிங் கிளம்புகிறார்கள். முதல்கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் நடக்கிறது.