கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
இன்றைய இளம் நடிகைகள் எல்லோரும் குஷ்புவிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் பேசினார். விஷால் நடித்து, தயாரித்துள்ள பாண்டியநாடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று பேசிய கேயார், இப்போது இருக்கும் இளம் நடிகைகள் யாரும் தங்களது பட புரொமஷன்களுக்கு கூட வருவதில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதோ இங்கு இருக்கும் குஷ்புவை பற்றி நான் சொல்லியாக வேண்டும். நான் அவரை ஹீரோயினாக வைத்து 6 படங்கள் தயாரித்துள்ளேன். அவர் ஒரு படத்தின் புரொமஷன்களுக்கு கூட வராமல் இருந்தது கிடையாது. அதேமாதிரி அவர் நடிக்கிற படமாக இருந்தாலும் சரி, இல்லாத படமாக இருந்தாலும் சரி,விழா என்று அழைத்தால் உடனே வந்துவிடுவார். அதான் குஷ்பு. இன்றைய புதுநடிகைகள் எல்லாம் அவரைப்பார்த்து அந்த ஒழுக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள் என்றார்.