வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பசங்க பட இயக்குநர் பாண்டிராஜ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக, குறிப்பாக குழந்தை நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு தருவதாகக்கூறி சிலர் ஏமாற்றி பணம் பறிப்பதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் பாண்டிராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதுடன் விளக்கமும் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சமீப காலமாக சில ஏமாற்று பேர்வழிகள் என் பெயரை பயன்படுத்தி மோசடிசெய்து வருகின்றனர். நான் அடுத்து இயக்கப்போகும் படத்தில்நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லியும் குறிப்பாக குழந்தை நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு தருவதாக சொல்லியும் அதுவும் ‘நான் இயக்குனர் பாண்டிராஜ் அலுவலகத்திலிருந்து பேசுகிறேன்’ என்று கூறி ஏமாற்றி வருகின்றனர். சினிமாவில் நடிப்பதற்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகவேண்டும் என்றும், அதற்கான உறுப்பினர் அட்டை அவர்களே வாங்கித்தருவதாகவும் கூறி,அதற்காக 49,000 ரூபாயை வங்கியில் போடச்சொல்லி ஒரு வங்கி கணக்கு எண்ணை கொடுப்பதாகவும் தகவல் வந்துள்ளது. இது முற்றிலும் பொய்யானதுஉ இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.
என்னுடைய எல்லா படங்களிலும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது வழக்கம். அப்படிவாய்ப்பு கொடுத்தாலும்கூட அவர்களை என் அலுவலகத்திற்கு நேரடியாக வரவழைத்துதான் பேசுவேன். தொலைபேசி மூலமாகவோ அல்லது யாரேனும் இடைத்தரகர்கள் மூலமாகவோ நான் யாருக்கும வாய்ப்பு தருவதாக கூறுவதில்லை.
சினிமா என்கிற இந்த கலை உலகை நோக்கி பலரும் பல கனவுகளுடன் வருகின்றனர். ஆனாலும் அவர்களுடைய கனவை சிதைக்கும்படி இங்கு பல ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கி்ன்றனர். சினிமா என்று வருகிறபோது யாரும் யோசிப்பதே இல்லை. என் பெயரை மட்டுமில்லாமல் சினிமா துறையில் உள்ள பல பிரபலமானவர்களின் பெயரை பயன்படுத்தி, வாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றுகின்றனர். அதை நம்பி யாரும் ஏமாறாதீர்கள்.
என் பெயருக்கும் என்னுடைய பசங்க புரொக்ஷன்ஸ் நிறுவனத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதை செய்து வருகின்றனர். அதனால் யாரும் ஏமாற்றப்பட்டுவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் இதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இது தொடர்பாக விருகம்பாக்கம் ஆர்5 போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளேன்.’’
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.