டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
36 வருடங்களுக்கு முன்பு கமல்-ரஜினி, ஸ்ரீதேவியை வைத்து பாரதிராஜா இயக்கிய படம் 16 வயதினிலே. இந்த படத்தில் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்களில் பாக்யராஜூம் ஒருவர். இவர் தற்போது 16 வயதினிலே படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றி ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கோவையில் இருந்து சென்னை வந்திருந்த நான், இந்த 16 வயதினிலே படத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன். ஆனால் முதல் நாள் பெங்களூருக்கு படப்பிடிப்புக்கு சென்றபோது, படப்பிடிப்பு நடத்த முடியாமல் சென்னைக்கு திரும்பினோம். அதன்பிறகு சில தடைகளைத்தாண்டி படப்பிடிப்பு நடந்தது.
அப்போது ஒருநாள், காட்டுப்பகுதியில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னையை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தோம். பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது கார் டயர் ஆடுவது போலவே எனக்கு தெரிந்தது. அதை நான் டைரக்டரிடமும், மற்றவர்களிடமும் சொன்னபோது அதை யாரும் காதில் வாங்கிக்கொள்ளவிலலை. ஆனால், கார் சென்னைக்கு அருகே வந்தபோது ஒரு டீகடை அருகே நிறுத்தச்சொன்னேன். அப்போது, இவனுக்கு வேற வேலையே இல்லை என்று முணுமுணுத்தபடி இருந்தார் டைரக்டர். ஆனால், கார் நிறுத்தப்பட்டு மெதுவாக ஓடிக்கொண்டிருந்தபோது, ஒரு பலத்த சத்தம் கேட்டது. அதோடு எங்களது காருக்கு முன்னே ஒரு டயர் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது, அது என்னடா டயர் என்று டைரக்டர் கேட்க, நம்ம காரோட டயர்தான் என்று நான் சொன்னேன், அதற்குள் காரும் நின்று விட்டது.
இப்படியாக அன்று பெரிய விபத்திலிருந்து தப்பினோம். ஆனால், அந்த காரை ஓட்டிய அப்துல்லா என்ற டிரைவர், அடுத்த நாள் சினிமா கம்பெனிக்கு வந்தபோது தலையில் பலத்த கட்டுடன் வந்தார். என்னாச்சு என்ற கேட்டதற்கு, காரை இங்கு நிறுத்திவிட்டு, ஆட்டோவில் சென்றேன். பலத்த மழை பெய்ததால் ரோட்டில் பெரிய பள்ளம இருப்பது தெரியாமல் அதற்குள் ஆட்டோ விழுந்து என் தலையில் அடிபட்டு விட்டது என்றார்.
அப்போது, உன் நேரம்தான் எங்களையும் அந்த பாடுபடுத்தியிருக்கிறது என்று அனைவரும் அப்துல்லாவை திட்டித்தீர்த்தோம் என்று சொன்ன கே.பாக்யராஜ், இதுமட்டுமின்றி, 16 வயதினிலே படப்பிடிப்பில் நிறைய விபத்துக்களில் இருந்து அதிர்ஷ்டவசமாக நாங்கள தப்பியிருக்கிறோம் என்று பழைய சமபவங்களை பாரதிராஜா, கமல், ரஜினி முன்னிலையில் நினைவுகூர்ந்தார் பாரதிராஜா.