பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கலைஞன் என்ற முறையில், எனக்கு மீண்டும் மிரட்டல் வந்தால், நாட்டை விட்டு வெளியேற தயங்க மாட்டேன், என, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். கமல் நடித்து, இயக்கி, தயாரித்து இந்தாண்டு துவக்கத்தில் வெளிவந்த படம் ‘விஸ்வரூபம்’. இப்படம் வெளிவர எவ்வளவு பிரச்னைகள் வந்தது என்று அனைவருக்கும் தெரியும். இதுதொடர்பாக கமல் பல பேட்டிகள் கொடுத்தார். அதிலும் குறிப்பாக தான் இந்த நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார். கமலின் இந்த பேச்சும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஒருவழியாக ‘விஸ்வரூபம்’ படமும் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை கமல் இயக்கி, நடித்து வருகிறார்.
இந்நிலையில், பெங்களூரு பிரஸ் கிளப்பில், நிருபர்களிடம் பேசிய, நடிகர் கமல்ஹாசன், ‘‘நாட்டின், அனைத்து திரைப்பட துறையையும், "பாலிவுட் என, அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. மொத்த திரைப்படங்களில், 50 சதவீத திரைப்படங்கள், தென்னிந்தியாவிலிருந்து வெளிவருகின்றன. ஹாலிவுட்டை இந்தியாவுக்கு இடமாற்ற வேண்டும் என்பது என் குறிக்கோள். கலைஞன் என்ற முறையில் மீண்டும் எனக்கு மிரட்டல், பிரச்னை ஏற்பட்டால், "நாட்டை விட்டு வெளியேறுவேன் என்ற கருத்திலிருந்து பின் வாங்க மாட்டேன். நான் நாட்டை விட்டு வெளியேறுவதை நாடு அனுமதிக்குமா? இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் கமல் இயக்கி, நடித்த "விஸ்வரூபம்-2 விரைவில் வெளிவரவுள்ளது. இந்த சூழ்நிலையில், அவர் இவ்வாறு பேசியுள்ளது, மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.