விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
16 வருடங்களுக்கு முன்பு அதாவது 1977ம் ஆண்டு வெளிவந்த படம் 16 வயதினிலே. ஸ்டூடியோக்களில் வலம் வந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவை கிராமங்களின் தெருக்களில் நடமாட வைத்த முதல் படம். தமிழ் சினிமாவின் 75 ஆண்டுகால வரலாற்றில் இப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் படம். அதனை இயக்கிய பாரதிராஜா, தயாரித்த எஸ்.ஏ.ராஜ் கண்ணு, இசை அமைத்த இளையராஜா, ஒளிப்பதிவு செய்த நிவாஸ், நடித்த கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி ஆகியோர் இப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். காந்திமதி மட்டும் சமீபத்தில் காலமானார்.
இந்தப் படத்தை இப்போது நவீன முறையில் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ்கோப் ஆக்கியிருக்கிறார்கள். நவீன ஒலிநுட்பத்தை பயன்படுத்தி பாடல்களை புதிதாக்கி இருக்கிறார்கள். இதன் பணிகள் முடிவடைந்து இப்போது அதனை ரிலீஸ் பண்ணும் முயற்சியில் இருக்கிறார்கள். அதற்கு முன்னோட்டமாக படத்தின் சில காட்சிகள் பத்திரிகையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் போட்டுக்காட்டப்படுகிறது. அதோடு படத்தின் டிரைலரும் வெளியிடப்படுகிறது. நாளை (அக்டோபர். 4)கமலா தியேட்டரில் நடக்கும் இந்த விழாவுக்கு ரஜினி, கமல், பாரதிராஜா உள்ளிட்ட படம் சம்பந்தப்பட்ட அனைவரும் வருகிறார்கள். இளையராஜாவுக்கும், பாரதிராஜாவுக்கும் மனத்தாங்கல் இருப்பதால் அவர் மட்டும் வருவது சந்தேகம் என்கிறார்கள்.
36 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு மண்வாசனை காவியத்தை இன்றைய இளைஞர்கள் சின்னத்திரையில் மட்டுமே பார்த்திருப்பார்கள். இன்றைய நடுத்தர வயதுக்காரர்கள் இண்டர்வெல் முருக்கு சாப்பிட்டு பார்த்த படத்தை, இளைஞர்கள் பாப்கார்ன் கொறித்து பார்க்க ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது.