ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டுப்பிள்ளை, ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்தவர் மும்பை வரவு நீது சந்திரா. தன்னை இயக்குனர்கள் எந்த அளவுக்கு தோலுரித்தாலும் அதுகுறித்து எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்காமல் ஒத்துழைப்பு கொடுக்கக்கூடியவர் நீது. என்றபோதும் கோடம்பாக்கத்தில் இன்னமும் அவர் ராசியில்லாத நடிகை லிஸ்டிலேதான் இருந்து வருகிறார்.
தென்னிந்திய சினிமா தன்னை துரத்துவதால் தற்போது சமீபகாலமாக தாய்மொழியான இந்திப்படங்களில் நடித்து வரும் நீதுசந்திரா, சினிமாவில் தன் சம்பாதித்த பணத்தைக்கொண்டு மும்பையை விட்டு சற்று வெளியே 5 ஏக்கர் நிலம் வாங்கிப்போட்டுள்ளாராம். அதில் இப்போது ஒரு பண்ணை வீடு கட்டப்போகிறாராம். மும்பை நகரத்தின் நெருக்கடியான சூழல் மூச்சு முட்டுவதால், பண்ணை வீடு கட்டியதும் அடிக்கடி அங்கு சென்று மூச்சு வாங்கிக்கொள்ளப்போகிறாராம்.
அதோடு, தனக்குத்தேவையான ஜிம் மற்றும் விளையாட்டு மைதானம் போன்றவற்றையும் உருவாக்க திட்டமிட்டுள்ள நீதுசந்திரா, தான் தனது தோழிகளுடன் ஹாயாக நீந்திக்குளிக்க ஒரு நீச்சல் குளத்தையும் தனது டேஸ்டுக்கேற்ப கட்டப்போகிறாராம். அதனால் தற்போது இந்தியில் நடித்து வரும் படங்களில் தனக்கு கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் பண்ணை வீடு கட்டுமான பணிக்கே செலவு செய்யப்போகிறாராம் நடிகை.