ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
‘மலையாளத்து மைனா’ அமலா பால், ‘நீலத்தாமரா’ என்ற மலையாள படத்தில் தான், முதல் முறையாக, வெள்ளித் திரையில் அறிமுகமானார். அதன் பின், தமிழில், தன் முழுக் கவனத்தையும் செலுத்தினார். ‘மைனா’ படம், அவருக்கு கோலிவுட்டில், ராஜ மரியாதையை பெற்றுத் தந்தது. இதன்பின், தன் தாய்மொழியான மலையாளத்தில் அவ்வளவாக அவர் கவனம் செலுத்தவில்லை. தெலுங்கு, இந்தியில் வாய்ப்புகள் வந்ததால், மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள், அழைத்தும், அதை, அவர் கண்டு கொள்ளவில்லை. கடைசியாக, மலையாளத்தில், ‘ரன் பேபி ரன்’ என்ற படத்தில் நடித்தார்.
இந்நிலையில், மலையாளத்தில், ‘டச்’ விட்டு போக கூடாது என்பதற்காக, இப்போது, மீண்டும் அங்கு, தன் கவனத்தை திருப்பியுள்ளார். கேரளாவில், வேகமாக வளர்ந்து வரும் ஹீரோவான, பகத் பாசில் ஜோடியாக, ‘ஒரு இந்தியன் பிரணய கதா’ என்ற படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இதில், வெளிநாட்டில் வசிக்கும் கேரள பெண்ணாக, அவர் நடிக்கவுள்ளாராம். இதனால், உற்சாகத்தில் இருக்கும், அமலாபாலின் கேரள ரசிகர்கள், ‘எண்ட அமலா ‘சேச்சி’க்கு கிடைத்த, ஓணம் பரிசு இது’ என, பெருமையடிக்கின்றனர்.