ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
யாசகன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் சில விஷயங்களை மனம்விட்டு பேசினார். அவர் பேசியதாவது: நான், பாலா, சசிகுமார்னு ஒரு செட்டு. மதுரை அலங்கார் தியேட்டர்ல படம் பார்த்துட்டு நாமும் படம் எடுப்போம்னு கிளம்பி வந்தோம். பாலா, பாலுமகேந்திரா சார்கிட்ட தொழில் கத்துக்கிட்டார். நான் பாலாகிட்ட கத்துக்கிட்டேன். என்கிட்டேருந்து சசி கத்துக்கிட்டார். இப்போ அவர்கிட்டேருந்து எஸ்.ஆர்.பிரபாகரன் வந்து சுந்தரபாண்டியன் பண்ணினார். இப்போ துரைவாணன் யாசகன் பண்ணியிருக்கார். இது தவிர சமுத்திரகனி, சீனு ராமசாமின்னு எங்க குடும்பம் பெருசா ஆகிக்கிட்டிருக்கு.
மதுரையிலேருந்து நாங்க ஒண்ணா வந்தாலும் வெளியில நினைக்கிற மாதிரி ஒண்ணா இல்லை. பங்ஷன்ல, நேர்ல பார்த்தா ஒரு ஹலோ சொல்லிக்குவோம். மற்றபடி அவுங்கவுங்க வேலைய பார்க்க கிளம்பிருவோம். ஒண்ணாவே திரிஞ்சா உருப்படாம போயிருப்போம். சசிகுமார் நடிக்க வந்தப்போ சினிமாவுக்கு ஒரு டி.ராஜேந்தர் போதும் நீயுமாடான்னு கிண்டல் பண்ணியிருக்கேன். இன்னிக்கு அவன் நடிக்குறதுக்கு வாங்குற சம்பளத்தை கேட்டா மயக்கம் வருது. பாலா படத்துல நடிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கான். நான் கால்ஷீட் கேட்டாகூட தருவானோ மாட்டானோ தெரியல. இப்படி ஒருத்தரை ஒருத்தர் தூரத்துல இருந்துதான் பார்த்துக்கிறோமே தவிர மற்றவங்க நினைக்கிறமாதிரி தினமும் சந்திக்கிறதில்லை. போன்கூட பண்ணிக்கிறதில்லைங்றதுதான் உண்மை. ஆளாளுக்கு தனி ரூட்டுல போறோம், ஜெயிக்கணும்னு வேண்டிக்கிறோம்.
இவ்வாறு அமீர் பேசினார்.