பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
வசந்தபாலன் இயக்கி சூப்பர் ஹிட்டான படம் ‘அங்காடித்தெரு’. இந்த படத்தில் அஞ்சலி நாயகியாக நடிக்க, மகேஷ் நாயகனாக அறிமுகமானார். இப்படத்துக்காக மாதக்கணக்கில் புதுமுக நாயகனை தேடிக்கொண்டிருந்த வசந்தபாலன், விளையாட்டு வீரரான மகேஷை கண்டு பிடித்து கொண்டு வந்தார்.
அந்த படமும் வெற்றி பெற்றதால், அதன்பிறகு கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மகேஷ்க்கு எதிர்பார்த்தபடி பெரிய அளவிலான படங்கள் கமிட்டாகவில்லை. அப்படி அவர் நடித்த இரண்டொரு சிறிய பட்ஜெட் படங்களும் ஓடவில்லை. அதையடுத்து தற்போது அதிக நம்பிக்கையுடன் மகேஷ் நடித்திருக்கும் புதிய படம்தான் யாசகன்.
இதுபற்றி மகேஷ் கூறுகையில், அங்காடித்தெருவுக்கு பிறகு சரியான படங்கள் அமையவில்லை. கிடைத்த படங்களில் நடித்தேன். ஆனால் எதுவும் ஓடவில்லை. ஆனால் இந்த யாசகன் என் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய படமாக கிடைத்துள்ளது. வித்தியாசமான இந்த காதல் படத்தை பார்ப்பவர்கள் க்ளைமாக்ஸின்போது இரண்டு சொட்டு கண்ணீர் விட்டபடி கனத்த இதயத்துடன் தான் ரசிகர்கள் தியேட்டரைவிட்டு வெளியே செல்வார்கள். அதனால், இந்த யாசகன் எனக்கு இன்னொரு அங்காடித்தெரு என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார் மகேஷ்.