ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது பெற்றபோதும், தமிழ் சினிமா ப்ரியாமணியை கண்டுகொள்ளவில்லை. அதனால் தனது திறமையை முன்வைத்து அக்கம் பக்கத்து மாநிலங்களில் சான்ஸ் கேட்டுப்பார்த்தார். ஆனால், இவரை ஏறஇறங்கப்பார்த்த படாதிபதிகள் கவர்ச்சி கோதாவில் இறக்கி விடவே முன்வந்தனர். அதனால் தேசிய விருது நடிகை என்ற பந்தாவையெல்லாம் மூட்டைகட்டி வைத்து விட்டு பிழைக்கிற வழிக்கு நல்ல பிள்ளையாக மாறினார்.
அதனால் திறமைக்கு சான்ஸ் கேட்டு சென்ற இடத்தில் உடம்பைக்காட்டி நடித்து சில வருடங்களாக காலம் தள்ளினார் ப்ரியாமணி. இருப்பினும் இப்போது தெலுங்கு, கன்னட மொழிகளில் அவரது கவர்ச்சிக்கு இருந்த மவுசும் குறைந்து விட்டதாம். அதனால் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் குத்துப்பாட்டு நடிகையாக உருவெடுத்த அவர், அடுத்து வில்லி மற்றும் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை, தன்னை புறக்கணித்த கோடம்பாக்கத்திலும் வெளியிட்டிருக்கிறார் ப்ரியாமணி. அதோடு, அப்படி நான் நடிக்கிற நெகடிவ் ரோல்களுக்கு நான்தான் டப்பிங் பேசுவேன். ஏன்னா என் குரல் வில்லிக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் என்றும் கம்பீர குரலில் பேசுகிறாராம் ப்ரியாமணி.