தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பீட்சாவை விட ஜிகர்தண்டா ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று அப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். பீட்சா படத்தின் மூலம் மக்களிடம் பாராட்டை அள்ளிய கார்த்திக் சுப்புராஜ், தனது அடுத்த படமாக ஜிகர்தண்டா என்ற படத்தை எடுத்துள்ளார்.
ஜிகர்தண்டா படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது, பீட்சாவில் பயம் மட்டுமே இருக்கும். ஆனால், ஜிகர்தண்டா முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக இருக்கும். பீட்சாவை விட இந்த படத்தில் ஸ்க்ரிப்ட் நாலு மடங்கு வேகமாக இருக்கும். இது வழக்கமான மதுரை படங்கள் மாதிரி இல்லாமல், விஷூவல், இசை, வசனங்கள்னு அனைத்துமே வேற மாதிரி இருக்கும். சித்தார்த்துக்கு இந்த கதை ரொம்ப பிடித்திருந்தது. இது வழக்கமான சாக்லேட் பாய் கதை இல்லை. நிறைய சவால்களை ஜஸ்ட் லைக் தட் சாதிக்கிற செம கேரக்டர். பீட்சாவை ஒரு வீட்டுக்குள்ளேயே வெச்சு முடிச்சுட்டோம். ஆனா, இந்த படம் முழுக்க அவுட்டோர். ஏகப்பட்ட பிரபலங்கள் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது என்றார்.