வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
பாலிவுட், ஹாலிவுட் என்று கலக்கிக்கொண்டிருந்த மல்லிகா ஷெராவத்துக்கு இப்போது போதுமான படவாய்ப்புகள் இல்லையாம். காரணம் அம்மணி தாறுமாறாக சம்பளம் கேட்டதுதானாம். பாலிவுட்டில் ஹாலிவுட் நடிகை போன்று சம்பளம் கேட்டவர், ஹாலிவுட்டில் அங்குள்ள நடிகைகளையும் விட அதிகமான சம்பளம் கேட்டாராம். இதனால் கடுப்பான படாதிபதிகள் மல்லிகாவுக்கு கெட்அவுட் சொல்லிவிட்டார்களாம்.
இதனால் ஹாலிவுட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நடிகையாக பாலிவுட்டுக்கு வந்தார் மல்லிகா. ஆனால், ஏற்கனவே அவர் மீது அதிருப்தியில் இருந்த பாலிவுட் தயாரிப்பாளர்கள் அவரை ஏறெடுத்தே பார்க்கவில்லையாம். இதனால் சில மாதங்களாக பொறுமை காத்த மல்லிகா ஷெராவத், இப்போது சுயம்வரம் என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறாராம்.
மேரே கயலோன் கி மல்லிகா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சியில் மல்லிகா ஷெராவத் கலந்து கொள்கிறார் என்றதும் மிகப்பிரமாண்டமாக தயாரிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாம்.