ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட், ஹாலிவுட் என்று கலக்கிக்கொண்டிருந்த மல்லிகா ஷெராவத்துக்கு இப்போது போதுமான படவாய்ப்புகள் இல்லையாம். காரணம் அம்மணி தாறுமாறாக சம்பளம் கேட்டதுதானாம். பாலிவுட்டில் ஹாலிவுட் நடிகை போன்று சம்பளம் கேட்டவர், ஹாலிவுட்டில் அங்குள்ள நடிகைகளையும் விட அதிகமான சம்பளம் கேட்டாராம். இதனால் கடுப்பான படாதிபதிகள் மல்லிகாவுக்கு கெட்அவுட் சொல்லிவிட்டார்களாம்.
இதனால் ஹாலிவுட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நடிகையாக பாலிவுட்டுக்கு வந்தார் மல்லிகா. ஆனால், ஏற்கனவே அவர் மீது அதிருப்தியில் இருந்த பாலிவுட் தயாரிப்பாளர்கள் அவரை ஏறெடுத்தே பார்க்கவில்லையாம். இதனால் சில மாதங்களாக பொறுமை காத்த மல்லிகா ஷெராவத், இப்போது சுயம்வரம் என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறாராம்.
மேரே கயலோன் கி மல்லிகா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சியில் மல்லிகா ஷெராவத் கலந்து கொள்கிறார் என்றதும் மிகப்பிரமாண்டமாக தயாரிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாம்.