'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட், ஹாலிவுட் என்று கலக்கிக்கொண்டிருந்த மல்லிகா ஷெராவத்துக்கு இப்போது போதுமான படவாய்ப்புகள் இல்லையாம். காரணம் அம்மணி தாறுமாறாக சம்பளம் கேட்டதுதானாம். பாலிவுட்டில் ஹாலிவுட் நடிகை போன்று சம்பளம் கேட்டவர், ஹாலிவுட்டில் அங்குள்ள நடிகைகளையும் விட அதிகமான சம்பளம் கேட்டாராம். இதனால் கடுப்பான படாதிபதிகள் மல்லிகாவுக்கு கெட்அவுட் சொல்லிவிட்டார்களாம்.
இதனால் ஹாலிவுட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நடிகையாக பாலிவுட்டுக்கு வந்தார் மல்லிகா. ஆனால், ஏற்கனவே அவர் மீது அதிருப்தியில் இருந்த பாலிவுட் தயாரிப்பாளர்கள் அவரை ஏறெடுத்தே பார்க்கவில்லையாம். இதனால் சில மாதங்களாக பொறுமை காத்த மல்லிகா ஷெராவத், இப்போது சுயம்வரம் என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறாராம்.
மேரே கயலோன் கி மல்லிகா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சியில் மல்லிகா ஷெராவத் கலந்து கொள்கிறார் என்றதும் மிகப்பிரமாண்டமாக தயாரிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாம்.