டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட், ஹாலிவுட் என்று கலக்கிக்கொண்டிருந்த மல்லிகா ஷெராவத்துக்கு இப்போது போதுமான படவாய்ப்புகள் இல்லையாம். காரணம் அம்மணி தாறுமாறாக சம்பளம் கேட்டதுதானாம். பாலிவுட்டில் ஹாலிவுட் நடிகை போன்று சம்பளம் கேட்டவர், ஹாலிவுட்டில் அங்குள்ள நடிகைகளையும் விட அதிகமான சம்பளம் கேட்டாராம். இதனால் கடுப்பான படாதிபதிகள் மல்லிகாவுக்கு கெட்அவுட் சொல்லிவிட்டார்களாம்.
இதனால் ஹாலிவுட்டில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட நடிகையாக பாலிவுட்டுக்கு வந்தார் மல்லிகா. ஆனால், ஏற்கனவே அவர் மீது அதிருப்தியில் இருந்த பாலிவுட் தயாரிப்பாளர்கள் அவரை ஏறெடுத்தே பார்க்கவில்லையாம். இதனால் சில மாதங்களாக பொறுமை காத்த மல்லிகா ஷெராவத், இப்போது சுயம்வரம் என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கிறாராம்.
மேரே கயலோன் கி மல்லிகா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சியில் மல்லிகா ஷெராவத் கலந்து கொள்கிறார் என்றதும் மிகப்பிரமாண்டமாக தயாரிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாம்.