தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
‘வாங்கிய கடனை திருப்பித்தராவிட்டால் எங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி கொலைசெய்து விடுவோம்’ என மிரட்டுவதாக சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் நடிகை சிந்து.
அங்காடி தெரு உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்துவந்தவர் சிந்து. சில நாட்களுக்கு முன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை மருத்துவமனையில் சேர்த்து அவரைக் காப்பாற்றினர் அக்கம் பக்கத்தினர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு டிஸ்சார்ஜ் ஆனார். தொடர்ந்து இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்கவந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென மயங்கி விழுந்தார்.
முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிந்து, ‘நான் ஐ.நா. என்ற திரைப்படம் எடுப்பதற்காக புரசைவாக்கத்தைச் சேர்ந்த சாந்தி, அமுலு, ஈஸ்வரி, சுகந்தி, குட்டிமா (எ) வசந்தி ஆகியோரிடம் 4 லட்ச ரூபாய் (20%) கந்துவட்டிக்கு வாங்கியிருந்தேன். வாங்கிய பணத்தைவிட அதிகமாகவே வட்டி கட்டிவிட்டேன். மேற்படி படம் சூட்டிங் எடுத்த குறுகிய காலத்திலேயே படத்தின் இணை தயாரிப்பாளர் வெளிநாடு சென்றுவிட்டார். இதனால் படம் எடுக்கப்படாமல் உள்ளது. என்னாலும் வாங்கிய பணத்தைக் கொடுக்க முடியவில்லை. மேற்படி நபர்கள் தொடர்ந்து போனிலும், வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் வந்து அடியாட்களை வைத்து கொலைமிரட்டல் விடுத்தனர். இத்துடன் நிற்காமல் எனது சகோதரி வீட்டிலுள்ளவர்களையும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி உங்களை கொன்று சாட்சியில்லாமல் எரித்துவிடுவேன் என்று கூறி மிரட்டுகிறார்கள்.
இது தவிர எனது மகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று குழந்தையைக் கடத்தி கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டுகிறார்கள். இதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இத்தகைய காரணங்களால் மன உளைச்சல் ஏற்பட்டு கடந்த செப்டம்பர் 6ம் தேதி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். அருகில் உள்ளவர்கள் என்னைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் நான் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோதும் என்னை கொலை செய்துவிடுவேன் என்றும் எனக்கு எல்லா பக்கமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்றும் மிரட்டுகிறார்கள். இவர்கள் மிரட்டலுக்கு பயந்து எனது போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன். இதனால் எனது தொழில் பாதிக்கப்பட்டது. இப்படி இருந்தால் நான் எப்படி கடனை அடைப்பது. நான் பணம் தரமாட்டேன் என்று கூறவில்லை. எனக்கு போதிய கால அவகாசம் தரவேண்டும்.
எனவே என்னை போனிலும், நேரடியாகவும், எனது சகோதரி வீட்டிற்கும் சென்று மிரட்டியும், தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்த மேற்படி நபர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’. இவ்வாறு அவர் கூறினார்.