Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள் - நடிகை சிந்து கண்ணீர் பேட்டி

10 செப், 2013 - 17:18 IST
எழுத்தின் அளவு:

‘வாங்கிய கடனை திருப்பித்தராவிட்டால் எங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி கொலைசெய்து விடுவோம்’ என மிரட்டுவதாக சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் நடிகை சிந்து.

அங்காடி தெரு உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்துவந்தவர் சிந்து. சில நாட்களுக்கு முன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை மருத்துவமனையில் சேர்த்து அவரைக் காப்பாற்றினர் அக்கம் பக்கத்தினர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு டிஸ்சார்ஜ் ஆனார். தொடர்ந்து இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்கவந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென மயங்கி விழுந்தார்.

 முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிந்து, ‘நான் ஐ.நா. என்ற திரைப்படம் எடுப்பதற்காக புரசைவாக்கத்தைச் சேர்ந்த சாந்தி, அமுலு, ஈஸ்வரி, சுகந்தி, குட்டிமா (எ) வசந்தி ஆகியோரிடம் 4 லட்ச ரூபாய் (20%) கந்துவட்டிக்கு வாங்கியிருந்தேன். வாங்கிய பணத்தைவிட அதிகமாகவே வட்டி கட்டிவிட்டேன். மேற்படி படம் சூட்டிங் எடுத்த குறுகிய காலத்திலேயே படத்தின் இணை தயாரிப்பாளர் வெளிநாடு சென்றுவிட்டார். இதனால் படம் எடுக்கப்படாமல் உள்ளது. என்னாலும் வாங்கிய பணத்‌தைக் கொடுக்க முடியவில்லை. மேற்படி நபர்கள் தொடர்ந்து போனிலும், வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் வந்து அடியாட்களை வைத்து கொலைமிரட்டல் விடுத்தனர். இத்துடன் நிற்காமல் எனது சகோதரி வீட்டிலுள்ளவர்களையும் அசிங்கமான வார்த்தைகளால் திட்டி உங்களை கொன்று சாட்சியில்லாமல் எரித்துவிடுவேன் என்று கூறி மிரட்டுகிறார்கள்.

இது தவிர எனது மகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று குழந்தையைக் கடத்தி கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டுகிறார்கள். இதற்கான வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இத்தகைய காரணங்களால் மன உளைச்சல் ஏற்பட்டு கடந்த செப்டம்பர் 6ம் தேதி தூக்க மாத்தி‌ரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றேன். அருகில் உள்ளவர்கள் என்னைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் நான் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோதும் என்னை கொலை செய்துவிடுவேன் என்றும் எனக்கு எல்லா பக்கமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்றும் மிரட்டுகிறார்கள். இவர்கள் மிரட்டலுக்கு பயந்து எனது போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன். இதனால் எனது தொழில் பாதிக்கப்பட்டது. இப்படி இருந்தால் நான் எப்படி கடனை அடைப்பது. நான் பணம் தரமாட்டேன் என்று கூறவில்லை. எனக்கு போதிய கால அவகாசம் தரவேண்டும்.

எனவே என்னை போனிலும், நேரடியாகவும், எனது சகோதரி வீட்டிற்கும் சென்று மிரட்டியும், தகாத வார்த்தைகளால் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்த மேற்படி நபர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
15 செப், 2013 - 20:41 Report Abuse
சு கனகராஜ் என்னது படம் எடுத்தீங்களா ?
Rate this:
JAIRAJ - CHENNAI,இந்தியா
12 செப், 2013 - 12:29 Report Abuse
JAIRAJ கந்து வட்டியப்பத்தி தினம் ஒரு ந்யூஸ் வருது...........இதெல்லாம் நல்லா தெரிந்திருந்தும்,விட்டில் பூசசி ஆகிவிட்டாய்......எப்படியாவது குடுத்துவிடலாம் என்று மோசமான கூட்டல் கழித்தலில் விழி பிதுங்கி நிற்கிறாய். உன்னை என்ன சொல்லி தேற்றுவது........ஒன்று செய்யலாம்.......கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிக நடிகர்கள் வைத்திருக்கும் பணத்திலிருது கொடுக்க வழி உண்டு. அவர்கள் காலில் விழுந்து,வசூலித்து போலிஸ் உதவியுடன் கந்து வட்டிக் காரர்களுக்கு கொடுத்து, நீ கொடுத்த பத்திரங்களை பெற்றுக்கொண்டு அமைதியாக இரு. நீ வசூலித்த பணத்தை எப்படியாவது நடித்து அடைத்து விடு. இப்பொழுது இருக்கும் நடிகர்கள் எல்லோரும் கண்டிப்பாக உதவுவார்கள். அதுவும் பெரிய பெரிய ஸ்டார்கள் கண்ண்டிப்பாக உதவுவார்கள்.அது தான் ஒரே வழி...........என்வாழ்வில் புதுப் பாதை கண்டேன் ...........எதும் தோணாமல் தடு மாறு கின்றேன்.................
Rate this:
rajaraja chozhan - madurai,இந்தியா
11 செப், 2013 - 21:48 Report Abuse
rajaraja chozhan கடன் வாங்கறதே பெரிய தல வலி...இவர் நடிக்கிறாரோ...
Rate this:
11 செப், 2013 - 10:59 Report Abuse
Dr.vijay SSLC fail (10 times..but seekiram pass aaiduven)) இதில் நாங்கள் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை...அரசு வங்கி , தங்க நகை கடன் ...இதை தவிர வேறு எங்கு கடன் வாங்கினாலும் இது தான் கதி ....
Rate this:
appu - madurai,இந்தியா
11 செப், 2013 - 08:34 Report Abuse
appu வட்டிக்கி வாங்கினது முதல் தவறு....விரலுக்கேத்த வீக்கம் வேணும்...இல்லாவிட்டால் இப்படி தான் லப்போ கிப்போனு அழுவனும்...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
15 செப், 2013 - 20:41Report Abuse
சு கனகராஜ் சொல்லிட்டாருடா நீதியரசர்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in