ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபத்தில் நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கேயார் அணி அமோக வெற்றிபெற்றது. இந்நிலையில் கேயாரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த தாணு தேர்தல் நியாயமான முறையில் நடைபெறவில்லை என்று இதனை எதி்ர்த்து கோர்ட்டில் முறையிடப் போவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தாணு மேலும் கூறியதாவது:
‘தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு நீதி அரசர்களாக எஸ்.ஜெகதீசன், கே.வெங்கட்ராமன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டனர். ஆனால் இருவரும் நியாயமாக நடந்துகொள்ளவில்லை. பொதுவாக தேர்தல் முடிந்ததும் அனைத்து ஓட்டு இயந்திரங்களையும் டிவி மூலம் காண்பித்துதான் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஆனால் இங்கு அனைவரையும் 1.30 மணி நேரம் வெளியில் அனுப்பிவிட்டனர். உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. தேர்தல் விதி எண்.20ன்படி பத்திரிகைகளில் விளம்பரம் செய்யக்கூடாது. ஆனால் அதை மீறி விளம்பரம் செய்ததாக நீதி அரசரிடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் முடிந்ததும் என்னை (தாணுவை) உள்ளே அழைத்துச்சென்று ஒரு மானிட்டரை காண்பித்து, ‘கேயார் வெற்றிபெற்றுவிட்டார். நீங்கள் தோற்றுவிட்டீர்கள்’ என்று கூறுகிறார்கள். இது ஜனநாயக முறைப்படி நடக்காமல் மோசடியாக நடந்துள்ளது என்று கூறியபடியே கண்ணீருடன் வெளியே வந்தேன். என்னைப்போலவே பொருளாளர், செயலாளர், துணைத்தலைவர் ஆகியோருக்கும் இதே நிலைதான். நீதி அரசர்களின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.
எங்கள் நோக்கம் தேர்தல் அறிவிப்பு நியாயமற்றது என்பதை நிரூபிக்கத்தான். தயாரிப்பாளர் சங்கத்தை முடக்க அல்ல. அதேநேரம் இரண்டு வருடங்களாக கேயார் குரூப் எங்களை சங்கத்தை நடத்தவிடாமல் செய்த அக்கிரம செயலை நாங்கள் தவிர்ப்போம். தயாரிப்பாளர் நன்மையே எங்களுக்கு முக்கியம். அதேநேரம் எங்கள் வெற்றி மக்களுக்கு தெரியாமல் போய்விடும். நியாயமாக ஜெயிக்க வேண்டிய நிலையில் உள்ளவர் தோற்றதும் தோற்க வேண்டிய நிலையில் உள்ளவர் ஜெயித்ததும் மக்களுக்கு தெரியாமல் போய்விடும். இதுகுறித்து கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட நீதி அரசர்கள் மீதும் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்’. இவ்வாறு அவர் கூறினார்.