கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை, தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். விழாவில், ஜனாதிபதி மற்றும் மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து சென்னையில் நேற்று, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் கல்யாண், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் ஆகியோர் கூறியதாவது: இந்திய சினிமா நூற்றாண்டு விழா, சென்னையில், வரும், 21ம் தேதியில் இருந்து, 24ம் தேதி வரை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். தமிழ் சினிமா உலகத்தினரின் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அனைத்து சினிமா உலகத்தினரும் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, 24ம் தேதி மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது. இதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
விழாக்கோலம் பூணும் சென்னை
சினிமா நூற்றாண்டு விழாவின் முன் நிகழ்வுகளாக சென்னை நகரத்தில் பொது பூங்காக்களை ஒலி-ஒளியினால் அலங்கரித்து, அதில் சினிமா கலை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறோம். பழைய சினிமா படங்களும் திரையிடப்படும். சென்னை கடற்கரையிலும் பழைய சினிமா படங்கள் திரையிட்டு காண்பிக்கப்படும். சென்னை நகரமே விழாக்கோலம் பூணும்படி, நகரை சிறப்பாக அலங்கரிக்க இருக்கிறோம்.
இலவச படக்காட்சிகள்
சென்னை சத்யம், அபிராமி ஆகிய திரையரங்குகளில் வருகிற 19-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை பொதுமக்களுக்கு பழைய சினிமா படங்கள் இலவசமாக காட்டப்பட இருக்கிறது.
படப்பிடிப்புகள் ரத்து
நான்கு நாட்களும், நிகழ்ச்சிகள், காலை, 9:00 மணியில் இருந்து, மதியம், 1:00 மணி வரையும், மாலை, 5:30 மணியில் இருந்து இரவு, 10:30 மணி வரையும் நடக்கின்றன. தமிழகம் முழுவதும், வரும், 24ம் தேதி, சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. வரும், 18ம் தேதியில் இருந்து, 24ம் தேதி வரை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.