ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் நான் எழுதும் பாடல்கள் இலக்கியம் தொடர்பாக இருக்கும் என்று கபிலன் வைரமுத்து கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்துவின் வாரிசுகள் மதன்கார்கி மற்றும் கபிலன். இவர்களில் மூத்தவர் மதன்கார்கி ஏற்கனவே தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இப்போது அவரது தம்பி கபிலனும் சினிமாவில் களம் இறங்கி இருக்கிறார். 5 கவிதை தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு சிறுகதை ஆகியவற்றை தொகுத்துள்ள கபிலன் ஆஸ்திரேலியாவில் ஜெர்னலிசம் முடித்து, தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் உதயம் என்.எச்.4 படத்தில் வா இரவுகள்... என்ற பாடல் மூலம் பாடலாசிரியராக அவதரித்தார். தற்போது வெண்ணிலா வீடு படத்தில் 3 பாடல், சிவப்பு படத்தில் பாடல்கள், இதுதவிர பெயர் இடப்படாத இன்னும் 3 படங்களுக்கும் பாடல்வரிகள் எழுதியுள்ளார்.
இதுகுறித்து கபிலன் கூறுகையில், எனது அண்ணன் மதன்கார்கி டெக்னாலஜியில் கைதேர்ந்தவர். அதனால் அவரது பாடல்கள் வரிகள் அனைத்து டெக்னாலஜி ரீதியாக இருக்கும், எனது பாடல் வரிகள் இலக்கியம் தொடர்பாக இருக்கும். சினிமாவில் அண்ணன்-தம்பி நாங்கள் இருவரும் இருந்தாலும் எங்களுக்குள் போட்டி எதுவும் வராது. பொதுவாக நான் கவிதைகளையோ, பாடல்களோ எழுதினால் அதை முதலில் எனது அம்மாவிடம் சென்று தான் காண்பித்து அவர்களின் ஒப்புதல் பெறுவேன். தொடர்ந்து நல்ல நல்ல பாடல்களை தர முயற்சிப்பேன் என்று கூறினார்.