ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ராம்கோபால்வர்மா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் டைரக்ட் செய்து வரும் படம் நான்தாண்டா. எங்கேயும் எப்போதும் சர்வானந்த் ஹீரோ. அனைகா என்ற நியூபேஸ் ஹீரோயின். இந்தப் படமும் ராம்கோபால்வர்மா பிராண்ட் தாதாக்கள் கதைதான். தமிழ் பதிப்பில் சென்னை தாதாக்களின் ஆட்டமும், தெலுங்கு பதிப்பில் ஐதராபாத் தாதாக்களின் ஆட்டமும்தான் படத்தோட கதை. சர்கார் படத்தில் தொடங்கி இன்று வரைக்கும் தாதாபிராண்ட் படங்களை எடுப்பதுதான் ராம்கோபால்வர்மா ஸ்டைல்.
அதைப் பற்றி அவர் கூறியதாவது: தாதாக்களை எனக்கு பிடிக்கும் (ஐ லைக் தாதாஸ்). அவர்கள் உலகம் பற்றி நன்கு தெரியும். அதற்காக நான் தாதா உலகில் இருந்தவனா? முன் அனுபவம் இருக்கான்னு கேட்காதீங்க. காதல் படம், சமூகத்துக்கு கருத்து சொல்ற படம், ஹிஸ்டாரிக்கல் மூவி, சயின்ஸ் பிக்ஷன் எடுக்குறதுக்கு நிறைய பேர் இருக்காங்க. நான் இந்த ஏரியாவுல இருக்கிறேன்.
பாசிட்டிவும், நெகட்டிவும் நிறைஞ்சதுதான் உலகம். சமூகத்துல நெகட்டிவ் ஏரியா தாதாக்களின் உலகம். அரசியல், சினிமா, கல்வி, மருத்துவம்னு அவுங்க நிறைஞ்சிருக்காங்க. அப்படி இருக்கிறவங்களோடு மறுமுகத்தை நான் சொல்றேன். அதை வச்சு மக்கள் அவுங்களை அடையாளம் கண்டு கொள்வாங்கதானே. இன்னொரு விஷயமும் தெரிஞ்சுக்குங்க தாதாக்களாவோ ரவுடியோவா யாரும் பொறக்கிறதில்ல. வாழ்ற சூழ்நிலைதான் அவுங்களை மாத்துது. ரொம்ப நாளாவே தமிழ் படம் ஒண்ணு டைரக்ட் செய்யணும்னு ஆசை இருந்துச்சு. அது இப்போ நிறைவேறியிருக்கு. அடுத்து இந்திப் படம் டைரக்ட் பண்ணப்போறேன் என்றார்.