தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தல அஜீத் ஒரு கார் ரேஸ் பிரியர் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது அவர் பைக் பிரியர் ஆகிவிட்டார். சமீபத்தில் பல லட்சங்கள் கொடுத்து ஒரு டுகாட்டி பைக் வாங்கினார். இப்போது ஷுட்டிங் எதுவும் இல்லாத இடைவெளியை பயன்படுத்திக் கொண்டுபைக்கிலேயே விழிப்புணர்வு பயணத்தை செய்துவிட்டு திரும்பியிருக்கிறார். அதாவது, தலையில் ஹெல்மெட், கை கால்களில் உறைகள், பாதுகாப்பு சாதனங்கள் அணிந்துகொண்டு வலம் வந்திருக்கிறார். பார்ப்பவர்களுக்கு பைக் ஓட்டுவது அஜீத் என்று தெரியாவிட்டாலும் இப்படித்தான் பாதுகாப்பு உடைகள் உணிந்து பைக் ஓட்டவேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் அல்லவா, அதற்குத்தான் இந்த பயணமாம். இதுகுறித்து அஜீத் கூறியிருப்பதாவது:
‘‘இந்தப் பயணத்தை ஜாலிக்காக மேற்கொள்ளவில்லை. மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே சென்றேன். அதிக செலவு என்று கருதாமல் நான் அணிந்து சென்றதைப் போன்ற பாதுகாப்பு சாதனங்களை மக்கள் வாங்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் ஒரு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க 20 ஆயிரம் செலவாவதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பு சாதனங்கள் அணிவதால் வியர்வை சிந்தும்தான். ரத்தம் சிந்துவதைவிட அது மேலானது அல்லவா. இந்த பயணத்தில் என்னுடன் பிரபல கார் பந்தய வீரர் கருண் சந்தோகின் தம்பி சுகைல் கலந்துகொண்டார். அவர் என்னுடன் வீரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் இதுபோல பல ஊர்களுக்கு செல்ல இருக்கிறேன்’’ என்றார்.
தல செய்கிறார் தலை பாதுகாப்பு பிரசாரம்