தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தின் சேர்மனாக இருப்பவர் ரவீந்தர் சந்திரசேகர். ஐ.நா தலைமை அலுவலகத்தில் செய்தி தொடர்புத்துறை சிறப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார். தமிழ் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். முதலில் நளனும் நந்தினியும் என்ற படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். தற்போது சுட்ட கதை படத்தை தயாரித்து வருகிறார். இதுதவிர ஒண் பிளஸ் ஒண் த்ரீ என்ற படத்தையும் கொலை நோக்கு பார்வை என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.
பாலாஜி, வெங்கி, லட்சுமி ரியா நடிக்கும் சுட்டகதை அடுத்த மாதம் வெளிவருகிறது. சுபு இயக்கி உள்ளார். இந்த படத்தின் வருமானத்தைக் கொண்டு இருதயம் பாதிக்கப்பட்ட 10 குழந்தைகளின் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்ள தயாரிப்பாளர் முடிவு செய்திருக்கிறார். சென்னை சவீதா பொறியியல் கல்லூரியும், பாரதிராஜா மருத்துவமனையும் இணைந்து நடத்திய இருதய பாதிப்பு குழந்தைகளின் மருத்துவ பரிசோதனை முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழந்தைகள் இந்த பலனை பெற இருக்கிறார்கள்.
உயிருக்கு போராடும் இந்த குழந்தைகளுக்காகவாவது படம் ஓட வேண்டும் என்று பிரார்த்திப்போம்.