இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
1967 ஜனவரி 12, சலனம் உள்ளிட்ட தொடர்களின் இயக்குனரும், சித்தி தொடரின் திரைக்கதை வசனகர்த்தாவுமான கவிதாபாரதியின் எழுத்து, இயக்கத்தில் தயாராகும் புதிய தொடர் 'வண்ணம்!'. இது விரைவில் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.காதல் என்பது மலர்க்கொத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு ஆணும், பெண்ணும் சம்பந்தப்பட்ட உறவு மட்டுமல்ல...அவர்களைச் சார்ந்த மனிதர்கள், குடும்பங்களின் கண்ணீரையும், வலியையும் உள்ளடக்கியது. காதலுக்கும், தன் குடும்ப உறவுகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு இளம்பெண்ணின் கதை தான் 'வண்ணம்' என்கிறார் கவிதாபாரதி.
அப்படியானால் இது காதல் கதையா? என்று கேட்டால், "காதலின் மறுபக்கத்தைச் சொல்லும் வலி நிறைந்த குடும்பக்கதை''என்கிறார் கவிதாபாரதி. நண்பர் ஒருவர் மூலம் இந்தக் கதையைக் கேட்ட "ஆனந்ததாண்டவம்" நடிகர் ரிஷி, முக்கிய கதாபாத்திரமொன்றில் தானே விரும்பி நடிக்கிறாராம். மலையாள முன்னணி நடிகை சரண்யா, அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.