டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
உன்னை சரணடைந்தேன் என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் சமுத்திரகனி. அந்த படத்தில் மங்காத்தா பட இயக்குனரான வெங்கட்பிரபு கதாநாயகனாக நடித்திருந்தார். அதையடுத்து, விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு என்ற படத்தை இயக்கிய சமுத்திரகனிக்கு அதன்பிறகு படவாய்ப்பு இல்லை. அதனால் சில காலம் சின்னத்திரை தொடர் இயக்கி வந்த அவர், நாடோடிகள் படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். அப்படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து படங்கள் இயக்கிக்கொண்டிருக்கிறார்.
மேலும், படம் இயக்குவதைப்போன்று நடிப்பதிலும் சமுத்திரகனிக்கு ஆர்வம் மிகுதியாம். அதனால்தான் சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் படத்தில் வில்லனாக நடித்தவர், பின்னர் ஈசன், சாட்டை, நீர்ப்பறவை உள்பட சில படங்களில் நடித்தார். அப்படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டதால், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்த சமுத்திரகனி, இப்போது தனுஷ் தயாரித்து நடிக்கும் வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்து வருகிறார்.
அப்பா கேரக்டர் என்றதும் முதலில் தயங்கிய சமுத்திரகனி, கதையில் தனது ரோலுக்கு இருக்கிற முக்கியத்துவத்தை அறிந்து ஓ.கே சொல்லிவிட்டாராம்.