‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழகத்தில் 10 நாள் தாமதத்திற்கு பின்னர் விஜய்யின் தலைவா படம் ரிலீஸானது. படம் ரிலீஸானதை தொடர்ந்து விஜய்யின் ரசிகர்கள் அவரது பேனர்கள், கட்-அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் தலைவா. அமலாபால் ஹீரோயின், மதராஸபட்டினம் டைரக்டர் விஜய் இயக்கியுள்ளார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசை, மிஷ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திர பிரகாஷ் ஜெயின் இப்படத்தை தயாரித்து இருந்தார்.
தமிழகத்தில் சிக்கல்
தலைவா படம் ஆகஸ்ட் 9ம் தேதியே உலகம் முழுக்க வெளியானது. ஆனால் தமிழகத்தில் தியேட்டர் அதிபர்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல், படத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் வசனங்கள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு, யு சான்று பெற்றும் வரிவிலக்கு கிடையாது என தமிழக அரசு அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இப்படம் ரிலீஸாகவில்லை. மேலும் படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக விஜய் கோடநாடு சென்று முதல்வரை சந்திக்க சென்ற போது அனுமதியும் மறுக்கப்பட்டது.
விஜய் நம்பிக்கை
அதேசமயம், தலைவா படம் நிச்சயம் வெளியாகும்; அதற்கு தமிழக முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்; அதுவரை ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என விஜய் நம்பிக்கை கூறினார். மேலும் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயினும், முதல்வர் தலையிட்டு படத்தை வெளியிட வேண்டும் எனவும், படம் வெளிவராவிட்டால் நான் பெரும் கடனாளியாவேன் எனவும் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தார்.
உண்ணாவிரதம் இருக்க முடிவு
இதற்கிடைய தலைவா படம் வெளியாகாததால் விஜய், அமலாபால், சந்தானம், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தனர். ஆனால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
தயாரிப்பாளருக்கு நெஞ்சு வலி
தலைவா படம் வெளியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளான தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரிலீஸ்க்கு சம்மதம்
இந்நிலையில் தொடர்ந்து, வினியோகஸ்தர் - தியேட்டர் உரிமையாளர்கள் இடையே, பட வெளியீடு குறித்து, இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு, 20ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தியேட்டர்களில், நேற்று முன்தினம் முதல் டிக்கெட் முன்பதிவு துவங்கப்பட்டது.
ரிலீஸானது - ரசிகர்கள் கொண்டாட்டம்
இதனையடுத்து 10நாள் தாமதத்திற்கு பிறகு தலைவா படம் இன்று(ஆகஸ்ட் 20ம் தேதி) தமிழகத்தில் ரிலீஸானது. தமிழகத்தில் சுமார் 400 தியேட்டர்களில் படம் ரிலீஸாகியுள்ளது. தலைவா படம் வெளியானதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தியேட்டர் முன்பு அவரது பேனர் மற்றும் கட்-அவுட்டுகளுக்கு மாலை அணிவித்தும், பால் அபிஷேகம் செய்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அரங்கு நிறைந்த காட்சிகள்
இணையதளங்களில் படம் வெளியானது, திருட்டு வி.சி.டி. க்கள் பெருகியது மற்றும் படம் சுமாராகத்தான் உள்ளது என இணையதளங்களில் விமர்சனங்கள் வந்த போதும், தியேட்டரில் சென்று தலைவா படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தலைவா படம் திரையிடப்பட்ட அநேக ஏரியாக்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இருக்கிறது.